பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு.. சென்னையில் பல இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ரெய்டு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மண்ணடி, முத்தையால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பெங்களூர் குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூர் ஒயிட்பீல்டு அருகே புரூக்பீல்டு பகுதியில் உள்ள குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கஃபே என்ற பெயரில் ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி இந்த ஹோட்டலில் வாடிக்கையாளர் போல் வந்த மர்மநபர் 2 டைம் பாம் குண்டுகளை வைத்து வெடிக்க செய்தார். இதில் 2 குண்டுகளும் வெடித்து சிதறின.

bangalore rameshwaram cafe blast Case NIA Raids at various places in Chennai

இந்த வெடிகுண்டு தாக்குதலில் 10 பேர் காயம் அடைந்தனர். கர்நாடக மாநிலத்தை அதிர வைத்த இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணையை தொடங்கியுள்ளது. வெடிகுண்டு வைத்து விட்டு தப்பி சென்ற நபர் இன்னும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில், பெங்களூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக சென்னையில் இன்று காலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை மண்ணடி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+