Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Explainer: நாளை தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல்.. வாக்குப்பதிவு எப்படி நடக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சில் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தல் விருப்புரிமை அடிப்படையில் நடைபெறும். வேட்பாளர்களுக்கு 1 முதல் 23 வரை எண்ணிட்டு வாக்களிக்கலாம். இந்த தேர்தல் செயல்முறை எப்படி நடக்கும் என்பதை பார்க்கலாம்.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு 5 ஆண்​டு​களுக்கு ஒரு​முறை தேர்​தல் நடத்​தப்படும். கடந்த 2018 ஆம் ஆண்​டுக்​குப் பிறகு உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி தற்​போது பார் கவுன்சில் தேர்தல் நடை​பெறவுள்​ளது. மொத்தமுள்ள 25 உறுப்​பினர்​களில் 2 பெண் உறுப்​பினர்​கள் நியமன முறை​யில் உச்சநீதி​மன்ற உத்​தர​வுப்​படி அகில இந்​திய பார் கவுன்​சிலால் நியமிக்​கப்படுவார்கள். மீதமுள்ள 23 உறுப்​பினர்​களை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் தமிழ்நாடு மற்றும் புதுச்​சேரியில் நாளை நடை​பெறுகிறது.

Bar Council Elections Tomorrow How the Preferential Voting System Works

143 பேர் போட்டி

இந்த 23 பேரில் குறைந்​த​பட்​சம் 5 பெண் உறுப்​பினர்​கள் தேர்வு செய்​யப்பட வேண்​டும் என்ற நிலை​யில், மொத்​தம் 143 பேர் போட்​டி​யிடு​கின்​றனர். தமிழ்நாடு மற்​றும் புதுச்​சேரி​யில் பார் கவுன்சிலில் பதிவு செய்த 1 லட்​சத்து 540 வழக்​கறிஞர்​கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்​ளனர். தமிழகத்​தில் 166 வாக்​குச்​சாவடிகளும், புதுச்​சேரி​யில் 2 வாக்​குச்​சாவடிகளும் அமைக்​கப்​பட்​டுள்ளன. சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் 56 வாக்​குச்​சாவடி மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

முதல் ​முறை​யாக க்யூ ஆர் கோடு சிலிப் முறை​யில் பார் கவுன்சில் தேர்​தல் நடத்​தப்​பட​வுள்​ளது. ஆன்​லைன் மூல​மாக க்யூ ஆர் கோடு ஸ்லிப்பை டவுன்லோடு செய்து அதன்படியே வழக்கறிஞர்கள் வாக்களிக்க முடியும். அந்த ஸ்லிப்பில் சம்​பந்​தப்​பட்ட வழக்​கறிஞரின் பெயர், பதிவு எண், வாக்​குப்​பட்​டியல் வரிசை எண், பதிவு செய்​துள்ள வழக்​கறிஞர் சங்​கம், வாக்​களிக்க வேண்​டிய வாக்​குச்​சாவடி விவரங்​கள் இடம்​பெற்​றிருக்​கும். இந்த QR கோடு ஸ்லிப்பை ஸ்கேன் செய்து சரிபார்த்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள். நாளை (மார்ச் 30 - திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும்.

வாக்கு செலுத்துவது எப்படி?

வழக்கறிஞர்களுக்கு, அனைத்து வேட்பாளர்களின் பட்டியலும் அடங்கிய வாக்குத்தாள் வழங்கப்படும். ஒரு வழக்​கறிஞர் முன்னுரிமை அடிப்​படை​யில் 1 முதல் 23 வேட்பாளர்​களை, அவர்​களின் பெயர்​களுக்கு எதி​ராக 1, 2, 3 என நம்​பரை உரிய முறையில் எழுதி தங்​களது வாக்கை பதிவு செய்​ய​லாம். ஒவ்வொரு வழக்கறிஞரும் குறைந்தபட்சம் 1 வாக்கையும், அதிகபட்சமாக 23 வாக்குகளையும் முன்னுரிமை அடிப்படையில் செலுத்த முடியும். NOTA-வும் கடைசி வாய்ப்பாக இடம்பெற்றிருக்கும்.

பார் கவுன்சில் தேர்தல் நடைபெறும் விதம் மற்றும் வாக்கு என்ணிக்கை எப்படி நடைபெறும் என்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஷெரின் விளக்குகிறார்.

Bar Council Elections Tomorrow How the Preferential Voting System Works

பார் கவுன்சில் நிர்வாகிகள் தேர்வு எப்படி நடக்கும்?

1. உதாரணமாக, வாக்களிக்க தகுதி உள்ள 1 லட்சத்து 540 பேரில் சுமார் 70% வாக்குப்பதிவு நடக்கிறது என்றால், 70,378 வாக்குகள் பதிவாகும். அதில், 23 உறுப்பினர்களை தேர்வு செய்ய ஒவ்வொருவருக்கும் குறைந்தது 3,060 வாக்குகள் தேவை. முதன்மை விருப்பமாக தேர்வு செய்ததில் 3,060 வாக்குகள் பெற்றவர்கள் நேரடியாக வெற்றி பெறுவார்கள்.

2. யாருமே நேரடியாக 3,060 வாக்குகள் பெறவில்லை என்றால், கடைசி இடத்தில் இருப்பவருக்கு செலுத்தப்பட்ட வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாமல் அவருக்கு முதன்மையாக (First preference) கிடைத்த வாக்குகளில் இருக்கும் இரண்டாம் விருப்பம் கணக்கில் எடுக்கப்படும்.

3. அவருக்கு இருக்கும் இரண்டாம் விருப்ப வாக்குகள் யாருக்கு செலுத்தப்பட்டுள்ளது என எண்ணப்படும். அதன்படி, 3,060 வாக்குகள் இந்த சுற்றில் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள்.

4. அதைத்தொடர்ந்து, கடைசி இடத்தில் இருப்பவர் நீக்கப்பட்டு, அவருக்கு முதன்மையாக வாக்களித்தவர்களின் இரண்டாம் விருப்பத் தேர்வு வாக்குகள் எண்ணப்படும். இரண்டாம் விருப்பத்தில் இருப்பவர் ஏற்கனவே நீக்கப்பட்டவராக இருந்தால் அந்த வாக்குச்சீட்டில் 3வது விருப்பத் தேர்வில் இருப்பவர் பெயர் பார்க்கப்பட்டு அவருக்கு ஓட்டு சேர்க்கப்படும்.

5. அதன்படி, 3,060 வாக்குகள் இந்த சுற்றில் பெறுபவர்கள் வெற்றி பெறுவார்கள். இது, மொத்தமாக தேர்வு செய்யப்பட உள்ள 23 உறுப்பினர்களை தேர்வு செய்யும் வரை தொடரும்.

பார் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர் தேர்வு

பார் கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், துணைத்தலைவர், அகில இந்திய பார் கவுன்சில் உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கானவர்களை தேர்வு செய்வார்கள். இந்த தேர்தலில் 25 உறுப்பினர்கள் மற்றும் அட்வகேட் ஜெனரல் ஆகியோர் ஓட்டு போடுவார்கள். இதில், அதிக வாக்குகள் பெறுபவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+