Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அந்த" ஒரு மணி நேரம்.. சத்தமே இல்லாத பவானிசாகர்..குழம்பி போன பூத் ஊழியர்கள்.. ஈரோட்டில் என்ன ஆச்சு?

பவானிசாகர் பேரூராட்சியில் ஒரு மணி நேரம் வாக்காளர்கள் ஓட்டுப்போட வரவில்லை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் வாக்குகளை செலுத்த வாக்காளர்கள் மும்முரமாகி வரும் நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.. குறிப்பாக பவானிசாகர் பேரூராட்சியில்..!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ள மொத்தம் உள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது.

வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி இன்று மாலை 6 மணிக்கு நிறைவு பெறுகிறது. கடைசி ஒரு மணி நேரம் மட்டும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடங்கியது

தொடங்கியது

இன்று பதிவாகும் வாக்குகள், வரும் 22ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. சட்டம் - ஒழுங்கை பேணி காக்க 1.33 லட்சம் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. இந்த தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டு நேரடியாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது..

முன்கூட்டியே வந்த மக்கள்

முன்கூட்டியே வந்த மக்கள்

சரியாக காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆனால், அதற்கு முன்பேயே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் தங்கள் வாக்குச்சாவடிகளில் ஓட்டளிக்க வரிசையில் நிற்க ஆரம்பித்துவிட்டனர்.. 7 மணிக்கு ஒவ்வொருவராக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தொடங்கினர்.. இதனால் அனைத்து வாக்குச்சாவடிகளும் படுபிஸியாகிவிட்டன.. ஆனால், பவானிசாகர் பேரூராட்சியில் மட்டும் சத்தத்தையே காணோம்.. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் பேரூராட்சியில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில் இன்று காலை வாக்குப்பதிவு தொடங்கியது.

வாக்காளர்கள்

வாக்காளர்கள்

பவானிசாகர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் 3390 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்... எனினும், வாக்குச்சாவடிகளில் வாக்குச்சாவடி அலுவலர்கள் இன்று காலையே வந்து வாக்குப்பதிவு எந்திரங்களை சரிபார்த்து கொண்டனர்.. வாக்குப்பதிவும் தொடங்கியது.. அங்குள்ள வாக்குப்பதிவு தொடங்கி ஒரு மணி நேரமாகியும் வாக்காளர்கள் வரவே இல்லை.. இதனால் அங்குள்ள பூத்கள் வெறிச்சோடி காணப்பட்டது.. வாக்காளர்கள் எப்போது வருவார்களோ என்று அவர்களின் வருகைக்காகவே வாக்குச் சாவடி ஊழியர்கள் காத்து கிடந்தனர்.

Recommended Video

    முத்தமிழ் கவியே With Anandhan Epi 01 | Vairamuthu’s Mazhai Kuruvi Explanation | OneIndia Tamil
    என்ன காரணம்?

    என்ன காரணம்?

    பிறகு நேரம் ஒரு மணி நேரம் கழித்து ஒரு சில வாக்காளர்கள் மட்டுமே வந்து, வாக்களித்து விட்டு செல்கின்றனர்... இதன் காரணமாக மிகவும் மந்தமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வருகைக்காக வாக்குச்சாவடி அலுவலர்கள் காத்துக்கிடக்கும் சூழ்நிலை ஏற்பட்டதும், இதன் காரணமாக வாக்குச்சாவடிகள் வெறிச்சோடி உள்ளதும், புதுவிதமான சூழலை ஈரோட்டில் ஏற்படுத்தி உள்ளது.. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.. ஒருவேளை இனிமேல் தான், வாக்காளர்கள் கிளம்பி வந்து ஓட்டுப்போடுவார்களா? அல்லது ஓட்டுப்போடும் ஆர்வம் குறைந்துவிட்டதா? பார்ப்போம்..!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+