பொன்மகன் டூ செல்வமகள் சேமிப்பு திட்டம்.. அஞ்சலக வங்கியில் அசத்தல் மாற்றம்.. மத்திய அரசு சூப்பர் சேவை
சென்னை: செல்வமகள் சேமிப்பு, பொன்மகன் போன்ற சேமிப்பு திட்டங்கள், ஆண், பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டமாகும்... இந்த செல்வமகள், தங்கமகன் சிறுசேமிப்பு திட்டங்கள், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கு எளிமையான முறையில் ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்த வசதிகள் உண்டா? 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கான காப்பீட்டு திட்டத்தை ஆன்லைனில் பெறும் வசதி உண்டா? இவைகளை பற்றின தகவல்களை இங்கு சுருக்கமாக பார்ப்போம்.
இந்திய அஞ்சலக வங்கியானது பல்வேறு புதுமைகளையும், சேவைகளையும் செய்து வருகிறது.. இதன்மூலம் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் நேரடியாக பலன்களை பெற்றும் வருகிறார்கள்.. அதாவது கடந்த 2018ம் ஆண்டு முதல் இன்று வரை 12 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குகளை தொடங்கியுள்ளனர்.

செல்வமகள் - பொன்மகன் சேமிப்பு
தமிழ்நாட்டில் புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் உள்ளிட்ட மாணவர்களுக்கான கல்வி உதவி தொகை கணக்குகள், விவசாயிகளுக்கான பிரதமரின் விவசாயிகள் நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கான கணக்குகள், கர்ப்பிணி பெண்களுக்கான பிரதமரின் மாத்ரு வந்தனா திட்ட கணக்குகள், முதியோர் உதவித்தொகை கணக்குகள் மற்றும் அனைத்து விதமான அரசு மானியம் /உதவித்தொகை பெறும் கணக்குகளும் இதில் அடங்கும்.
இதில், தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது, செல்வமகள் சேமிப்புத் திட்டமாகும்.. பெண் குழந்தைகளின் சேமிப்பை ஊக்கப்படுத்தி, அவர்களின் உயர்கல்வி, திருமணம் மற்றும் மருத்துவ செலவுகளுக்காக உபயோகப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
பொதுவைப்பு நிதி
அதாவது குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் என்பதே இந்த திட்டத்தின் சாராம்சமாகும்.. இதன்மூலம் 11,16,815 வரை சேமிக்க முடியும். இந்த திட்டத்திற்கு குறைந்தபட்ச தொகையாக நிதியாண்டிற்கு 250 ரூபாய் முதல், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரை இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
அதேபோல, தமிழகத்தின் மிகச்சிறந்த சேமிப்பு திட்டமாக பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டம் ஆண்களுக்கு மட்டும் இருக்கும் மற்றொரு சிறுசேமிப்பு திட்டமாகும்.. பாதுகாவலர்: 10 வயதுக்குட்பட்ட சிறுவனின் சார்பாக பெற்றோர் அல்லது பாதுகாவலர் (guardian) கணக்கை திறக்கலாம்... 10 வயதை பூர்த்தி செய்திருந்தால் ஆண் குழந்தை தானாகவே இந்த திட்டத்தில் கணக்கை துவங்கலாம். குறைந்தபட்ச வயது வரம்பு எதுவும் குழந்தைக்கு கிடையாது
அஞ்சலக சேமிப்பு திட்டம்
இதுபோல, அனைத்து அஞ்சலக சேமிப்பு திட்டங்களிலும், விவசாயிகளுக்கான நிதி ஆதரவு கணக்குகள், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான கணக்குகள், பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டக்கணக்குகள், முதியோர் உதவி தொகை கணக்குகள் போன்றவற்றிற்கும் அரசு மானியம் /உதவி தொகை பெறும் கணக்குகளும் இதில் உண்டு.
எனினும், ஆரம்ப காலங்களில் ஆரம்பிக்கப்பட்ட கணக்குகளில் வாரிசு நியமனம் செய்யப்படாமல் உள்ளது.. எனவே, இதுபோன்ற சேமிப்பு கணக்குகளுக்கு வாரிசுதாரரை நியமிப்பதன் மூலம், கணக்கை துவங்கியவர் இறந்துவிட்டாலும்கூட, அவரது வங்கிக் கணக்கிலுள்ள தொகை, எந்தவிதமான சிக்கலுமின்றி வாரிசுதாரர்களுக்கு வந்து சேர்கிறது..
மொபைல் பேங்க்கிங்
எனவேதான், அனைத்து விதமான சேமிப்பு கணக்குகளிலும் வாரிசுதாரரை நியமிக்கும் வசதிகள், ஒவ்வொரு மாநில அஞ்சல் அலுவலகங்களில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோரில், இதற்கென உள்ள பிரத்யேக ஆப் மூலமாகவும்,கணக்குதாரர்கள் வாரிசு நியமனம் செய்யலாம், அல்லது மாற்றமும் செய்யலாம்.
இதே செயலி மூலம், தங்களது அஞ்சலக வங்கி கணக்குகளில் ஆதார் நம்பரையும் இணைத்து, அரசின் மானிய தொகைகளை பெற்றுக் கொள்ள முடியும்.. வங்கி கணக்குடன் அஞ்சலக சிறுசேமிப்பு கணக்கையும் இணைத்து ஆன்லைன் மூலம் பரிவர்த்தனைகளையும் மேற்கொள்ள முடியும்.
காப்பீட்டு வசதி - யுபிஐ குறியீடு
ஆன்லைன் மூலம் பணம் செலுத்தும் வசதி கிடைத்துவிட்டால், செல்வமகள், தங்கமகன் போன்ற சிறுசேமிப்பு திட்டங்களுக்கும், அஞ்சலக ஆயுள் காப்பீடு திட்டங்களுக்கும், எளிதாக பணம் செலுத்த முடியும்..
அதேபோல, பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் 555 ரூபாய் மற்றும் 755 ரூபாய் என்ற குறைவான பீரிமிய தொகையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வசதியும் இதில் உள்ளது.. கடை வைத்திருக்கும் வியாபாரிகள், யுபிஐ குறியீடு மூலம் பணம் பெறும் வசதியும் இதில் அறிமுகமாகியிருக்கிறது.
பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து வெறும் 555 ரூபாய் மற்றும் 755 ரூபாய் என்ற குறைவான பீரிமிய தொகையில் 10 லட்சம் முதல் 15 லட்சம் வரையிலான தனி நபர் விபத்து காப்பீடு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மேலும், 2 மற்றும் 4 சக்கர வாகனங்களுக்கு காப்பீடு வசதியும் இதில் உள்ளது.. கடை வைத்திருக்கும் வியாபாரிகள், யுபிஐ குறியீடு மூலம் பணம் பெறும் வசதியும் இதில் அறிமுகமாகியிருக்கிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications