அரக்கோணத்தில் பற்றாக்குறை..5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கிய பாரதிதாசனார் கல்விக் குழுமம்
அரக்கோணம்: அரக்கோணத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை போக்க ஆக்ஸிஜன் செறிவூட்டியை பாரதிதாசனார் கல்விக் குழும ஆசிரியர்கள் வழங்கியுள்ளனர்.
கொரோனா பரவல் காரணமாக சில இடங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை உள்ளது. அரசு இந்த பற்றாக்குறையை போக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் தன்னார்வலர்கள், சமூக ஆர்வலர்கள் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வாங்கித் தருகிறார்கள்.

அந்த வகையில் அரக்கோணத்தில் பற்றாக்குறையை போக்கிட 5 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பாரதிதாசனார் கல்விக் குழும ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் நேற்று மாலை வாங்கிக் கொடுத்தனர்.

ரூ. 5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் அரக்கோணம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் M.J. நிவேதிதா பாரதிதாசனார் கல்விக் குழுமத்தின் தலைவர் S.சுந்தர், இயக்குனர் S.அகன் ராஜசேகர் மற்றும் காவேரிப்பாக்கம் கிளையின் தாளாளர் வேல்சாரதி ஆகியோர் வழங்கினர்.












Click it and Unblock the Notifications