நடிகை அமலா பாலுடன் திருமணம்.. கோர்ட்டில் ஆதாரங்களை காட்டி "மைனா"வை அம்பலப்படுத்திய பவ்நிந்தர் சிங்
சென்னை: தனக்கும் நடிகை அமலா பாலுக்கும் திருமணம் நடந்த ஆதாரத்தை காண்பித்து பவ்நிந்தர் சிங்கிற்கு வானூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதிலிருந்து அமலா பால் பொய் சொல்லியது அம்பலமானது.
நடிகை அமலா பாலுக்கு பவ்நிந்தர் சிங் என்பவருடன் நட்பு ஏற்பட்டு இருவரும் திரைப்பட நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தனர். இதற்காக இவர்கள் இருவரும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து திரைப்பட தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது அமலா பாலும் பவ்நிந்தர் சிங்கும் திருமணம் செய்து கொள்வதாக முடிவு செய்திருந்தனர். ஆனால் இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பிரிந்து விட்டனர் என கூறப்படுகிறது.

அமலா பால்
இந்த நிலையில் நடிகை அமலா பால் சார்பாக அவரது மேனேஜர் விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில் விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகே தனக்கு சொந்தமான வீட்டில் தங்கியிருந்த போது பவ்நிந்தர் சிங் உள்ளிட்டோர் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாகவும் கருத்து வேறுபாட்டால் பிரிந்த நிலையில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தார்.

நெருக்கம்
மேலும் தன்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுவிடுவேன் என்றும் பவ்நிந்தர் சிங் மிரட்டுவதாகவும் அமலா பால் தன் புகாரில் தெரிவித்துள்ளார். இதையடுத்து பவ்நிந்தர் சிங் மற்றும் அவரது குடும்பத்திர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரை கடந்த மாதம் 22 ஆம் தேதி கைது செய்தனர்.

வானூர் நீதிமன்றம்
இதையடுத்து வானூர் நீதிமன்றத்தில் பவ்நிந்தர் சிங் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார். அவரது மனு மீது நேற்றைய தினம் விசாரணை நடைபெற்றது. அப்போது அமலா பாலிடம் தான் அத்துமீறவில்லை என்றும் தனக்கும் அமலா பாலுக்கும் நடந்த பதிவுத் திருமணத்தின் சான்றிதழை பவ்நிந்தர் சிங் சமர்ப்பித்தார்.

இரண்டாவது திருமணம்
கடந்த 2018ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் புஷ்கரில் உள்ள ராதிகா பேலஸில் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்களையும் சிங் சமர்ப்பித்துள்ளார். இதையடுத்து பவ்நிந்தர் சிங்கிற்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் அமலா பால் கூறியது பொய் என்பதும் நிரூபணமாகிவிட்டது. இயக்குநர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்த அமலா பால் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டார். ஏ.எல்.விஜய் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் தற்போது அமலா பாலும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது வெளிச்சத்திற்கு வந்தது.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications