Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வண்டலூரில் வியப்பு.. தமிழகத்தில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 40 சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட உள்ளது. ஏற்கனவே செயல்பாட்டிலுள்ள 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை கண்டிப்பாக மூட வேண்டும் என்ற நிலை உள்ளபோது, புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது. இதில், கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதால், இது வாகன ஓட்டிகளை அதிர்ச்சிக்கும், அதிருப்திக்கும் உள்ளாக்கி வருகிறது.

நம்முடைய நாட்டை பொறுத்தவரையில், தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சக கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Vandalur chennai toll plazas

அந்தவகையில், தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள 1,228 சுங்கச்சாவடிகளிலும், தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகளிலும், வாகன ஓட்டிகளிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றன.

ஆண்டுதோறும் கட்டணம் உயர்வு

தமிழகத்தை பொறுத்தவரை, கடந்த 2 வருடங்களில் மட்டும் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன... வழக்கமாக, ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 1ம் தேதி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும்.. 5 சதவீதத்திலிருந்து 10 சதவீதம் வரை இந்த கட்டணம் உயர்த்தப்படும்..

இந்த சுங்கச்சாவடிகளில் மத்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்பந்தப்படி 1992ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008ம் ஆண்டு போடப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அந்தவகையில், இன்று மார்ச் 31 நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 விழுக்காடு வரை கட்டணத்தை உயர்த்தி வசூலிக்குமாறு தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சுற்றறிக்கையை ஏற்கனவே அனுப்பியிருந்தது.

புதிய கட்டணம் - அட்டவணை

அந்த அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள 78 சுங்கச்சாவடிகளில் முதற்கட்டமாக 40 சுங்கச்சாவடிகளுக்கு வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளது. அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னையை அடுத்த பரனூர் சுங்கச்சாவடி, திண்டிவனம்-ஆத்தூர், நெல்லூர், நாங்குநேரி, சென்னை- பெங்களூரு நெடுஞ்சாலையில் உள்ள ஸ்ரீபெரும்புதூர், பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி, பள்ளிக்கொண்டா, புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, வானகரம், சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்த கட்டணம் தொடர்பான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது..

வண்டலூர் டூ மீஞ்சூர் கட்டணங்கள்

- வண்டலூர்- மீஞ்சூர் வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.140 கட்டணம்

- இலகு ரக வணிக வாகனங்களுக்கு ரூ.225 கட்டணம்

- லாரி, பஸ்கள் ரூ.470 மற்றும் 3 அச்சு வணிக வாகனங்களுக்கும் ரூ.510 ரூபாய் வரை கட்டணம்

- 4 முதல் 6 அச்சு கனரக கட்டுமான வாகனங்களுக்கு ரூ.735 மற்றும் 7 முதல் அதற்கு மேல் அச்சு உள்ள வாகனங்கள் ரூ.895 கட்டணம்

- நெமிலிச்சேரி வரை கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20 கட்டணம்

- இலகுரக வணிக வாகனம் ரூ.40. லாரி, பஸ்கள் ரூ.85, 3 அச்சு கனரக வாகனங்களுக்கு ரூ.90. ரூ.130, ரூ.160 கட்டணம்

- பாடியநல்லூர்- மீஞ்சூர் இடையே கார், ஜீப், வேன், ஆட்டோவிற்கு ரூ.20, இலகுரக வணிக வாகனம், சரக்கு வாகனம் ரூ.15, லாரி, பஸ்கள் ரூ.75, இதர கனரக வாகனங்களுக்கு ரூ.80, ரூ.115, ரூ.140 கட்டணம்

- அனுமதிக்கப்பட்ட சுமையின் எடைக்கு அதிகமாக சரக்கு ஏற்றி வரும் வாகனங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திலிருந்து 10 மடங்கு கட்டணம்

Vandalur chennai toll plazas

பரனூர் சுங்கச்சாவடி

இதில், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கட்டண உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 15 வருடங்கள் கடந்த காலாவதியான சுங்கச்சாவடிகள் மூடப்பட வேண்டும் என்பது மத்திய அரசின் விதியாக உள்ளது.

அந்தவகையில், தமிழகத்தில் 78 சுங்கச்சாவடிகளில் 32 சுங்கச்சாவடிகளை மூடவேண்டும். எனினும், கடந்த 2 வருடங்களில் புதிதாக 12 சுங்கச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளது.. காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடுவதற்கு பதிலாக, புதிதாக சுங்கச்சாவடிகளை திறந்து, அதற்கு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது, தமிழக வாகன ஓட்டிகளுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+