அரசு ஊழியர்களுக்கு பெரிய ஜாக்பாட்.. மீண்டும் எகிறுதா சம்பளம்.. அதுவும் ஜூலையிலே..மத்திய அரசு அதிரடி
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு சர்ப்ரைஸ் செய்தியை மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 42 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வரும் நிலையில் ஜூலை மாதம் விரைவில் தொடங்க இருப்பதால் மறுபடியும், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட இருக்கிறது.
இந்த அகவிலைப்படி உயர்வு, விலைவாசி ஏற்றத்தை குறிக்கும் பணவீக்க விகிதத்துக்கு ஏற்ப நிர்ணயம் செய்யப்படுகிறது. மேலும் கடந்த சில மாதங்களாகவே பணவீக்கம் குறைந்து கொண்டு வருகிறது. எனவே, ஜூலை மாதம் ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், அகவிலைப்படியானது 45 சதவீதமாக உயரும் என்று தெரிகிறது.. அதனால் ஊழியர்களுக்கு சம்பளமும், ஓய்வூதியமும் உயரக்கூடும்..

அதுமட்டுமல்ல, அகவிலைப்படி 4% உயர்வு வழங்கினால் ஊழியரின் மாதாந்திர சம்பளம் ரூ.42,000 மற்றும் அடிப்படை ஊதியம் ரூ.25,500 ஆக இருப்பின் மாத சம்பளம் ரூ.10,710 ஆக உயரும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அகவிலைப்படி: மேலும், 2023 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான அகவிலைப்படி உயர்வு விரைவில் வெளியாக உள்ள நிலையில், 18 மாத நிலுவை தொகையும் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த DA உயர்வானது 4% அறிவிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி உயர்வானது, 46 % ஆக இருக்கும் என்று தகவல் வெளியாகி வருவதால், இது அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியை தந்து வருகிறது. அதேபோல, இன்னொரு செய்தியும் சொல்லப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்திலும் உயர்வு வேண்டும் என்று நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.. அதாவது, ஃபிட்மெண்ட் ஃபாக்டரை உயர்த்த வேண்டும் என்று கேட்டு வருகிறார்கள்.. இப்போதைக்கு 2.57 சதவீதம் பிட்மெண்ட் ஃபாக்டரை ஊழியர்கள் பெற்று வருகின்றனர்.. அதன்படி ரூ.18,000 குறைந்த பட்ச ஊதியமாகவும், ரூ.58,000 அதிகபட்ச ஊதியமாகவும் உள்ளது.
இந்த 2.57 சதவீதம் ஃபிட்மென்ட் ஃபாக்டரை, 3.68 மடங்காக உயர்த்த வேண்டும் என்பதே ஊழியர்களின் கோரிக்கையாகும்.. ஊழியர்களின் கோரிக்கையையடுத்து, பிட்மெண்ட் ஃபாக்டரை அரசு உயர்த்த திட்டமிட்டுள்ளதாம். ஒருவேளை, ஃபிட்மென்ட் ஃபாக்டரை அரசு 2.57ல் இருந்து 3.68 ஆக உயர்த்தினால், குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் ரூ. 18,000ல் இருந்து ரூ. 26,000 ஆக உயரும்..
அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் மிகப்பெரிய அளவில் உயர்த்தப்படும் என்றே தெரிகிறது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் ஜூலை மாதத்தில் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications