லோன் வாங்கப் போறீங்களா? உங்களை ஏமாற்றினால் முழுப் பணமும் திரும்பக் கிடைக்கும்: RBI புதிய சட்டம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நீங்கள் எப்போதாவது அவசரமாக ஒரு வீட்டுக் கடனோ அல்லது வேறு ஏதேனும் கடனோ வாங்குவதற்காக வங்கிக்கு சென்று, நீங்கள் கேட்கவே செய்யாத Insurance எனப்படும் காப்பீட்டுத் திட்டத்தோடு திரும்பி வந்திருக்கிறீர்களா? அல்லது வங்கியின் செல்போன் ஆப்பை பயன்படுத்தும் போது, திடீரென தோன்றும் தனிநபர் கடன் விளம்பரங்களில் தெரியாமல் கிளிக் செய்து சிக்கியிருக்கிறீர்களா? அப்படின்னா, இந்திய ரிசர்வ் வங்கியான RBI இப்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு உங்களுக்கான ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி என்றே சொல்லலாம்.

பொதுமக்களுக்கு இந்த பிரச்சனை, சிக்கலைத் தீர்க்க, "பொறுப்பான வணிக நடத்தைக்கான புதிய வழிகாட்டுதல்கள் 2026" என்ற அதிரடியான சட்டத் திருத்தத்தை ரிசர்வ் வங்கி கொண்டுவந்துள்ளது.

RBI new rule loan refund policy banking news home loan borrowers RBI guidelines

இதன் மூலம், இனிமேல் எந்தவொரு வங்கியோ அல்லது நிதி நிறுவனமோ கஸ்டமர்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களுக்குத் தேவையில்லாத இன்சூரன்ஸ் போன்ற பிற திட்டங்களை கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.

இன்சூரன்ஸ் இனிமேல் கட்டாயமில்லை

வழக்கமாக, மக்கள் வீட்டுக் கடன் வாங்க போகும்போது. வங்கிகள் தங்களுடன் கூட்டு வைத்துள்ள காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசிகளை எடுத்தால் மட்டும்தான் லோன் பாஸ் ஆகும் என்று மிரட்டுவதாக புகார்கள் எழுந்தன.

இதற்குதான் இப்போது ஆர்பிஐ முற்றுப்புள்ளி வைத்துள்ளது.. "வீட்டுக் கடன் பெறுவதற்கு இன்சூரன்ஸ் எடுப்பது கட்டாயம் கிடையாது" என்று மிகத் தெளிவாக ரிசர்வ் வங்கி சொல்லி உள்ளது.. ஒருவேளை கடனுக்காக இன்சூரன்ஸ் தேவைப்பட்டால் கூட, கஸ்டமர்கள் தனக்கு விருப்பமான எந்தவொரு வெளி நிறுவனத்தில் இருந்தும் அதை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட வங்கியில்தான் எடுக்க வேண்டும் என்று யாரும் வற்புறுத்தக் கூடாது.

லோனை மாற்றினாலும் சிக்கல் இல்லை

அதேபோல், வட்டி குறைவாக இருக்கிறது என்பதற்காக உங்களுடைய வீட்டுக் கடனை ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு மாற்றும் போது, "பழைய இன்சூரன்ஸ் செல்லாது, எங்களிடம் புதிய இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்" என்று புதிய வங்கிகள் வற்புறுத்தக் கூடாது. வாடிக்கையாளர் தங்களின் பழைய இன்சூரன்ஸ் பத்திரத்திலேயே புதிய வங்கியின் பெயரை மட்டும் சேர்த்து, அதையே தாராளமாகத் தொடரலாம்.

ஏமாற்றினால் அபராதம் மற்றும் இழப்பீடு

வங்கி ஊழியர்கள் தங்களின் டார்கெட்டை முடிப்பதற்காகவும், கமிஷன் மற்றும் ஊக்கத்தொகை வாங்குவதற்காகவும், வாடிக்கையாளர்களிடம் தவறான பொய் வாக்குறுதிகளை கொடுத்து தேவையில்லாத திட்டங்களை விற்பதை ரிசர்வ் வங்கி "தவறான விற்பனை" என்று சட்டம் போட்டுத் தடுத்துள்ளது. இனிமேல் இன்சூரன்ஸ் விற்பனைக்காக வங்கி ஊழியர்கள் தனியாக எந்த ஊக்கத்தொகையும் பெறக் கூடாது.

ஒருவேளை, வங்கி ஊழியர்கள் ஏமாற்றி ஒரு திட்டத்தை விற்றது நிரூபிக்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்திய முழுப் பணத்தையும் வங்கியே திருப்பித் தர வேண்டும். அதுமட்டுமில்லாமல், அதனால் வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கும், இழப்பிற்கும் வங்கியே பொறுப்பேற்று நஷ்டஈடும் வழங்க வேண்டும்.

உங்க அனுமதி இல்லாமல் எதுவும் நடக்காது

இனிமேல் வாடிக்கையாளரின் தெளிவான ஒப்புதல், அதாவது அவர்களின் எழுத்துப் பூர்வ கையெழுத்தோ அல்லது மொபைல் போனுக்கு வரும் ஓடிபி அனுமதியோ இல்லாமல் எந்தவொரு திட்டத்தையும் வங்கியால் விற்க முடியாது.

மக்களுக்கு பாதுகாப்புத் தரும் இந்த மிக முக்கியமான புதிய விதிமுறைகள் அனைத்தும், வரும் 2027ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் முழுமையாக அமலுக்கு வரவுள்ளன. இதனால் இனிமேல் சாமானிய மக்கள் பயமின்றி வங்கிக்கு சென்று வரலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+