ஒரு லெவலுக்கு மேல் எடப்பாடியை பாஜக மிரட்ட முடியாது.. ஏன் தெரியுமா? பாயிண்ட்ஸ்களை அடுக்கிய புள்ளி!
ஓ பன்னீர்செல்வத்தை வைத்து அதிமுகவிற்கு உள்ளே பாஜக ஆட்டம் காட்டிக்கொண்டு இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
சென்னை: எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் பாஜக தலைவர் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைதேர்தலால் அதிமுகவின் உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒருவழியாக நேற்றுதான் ஓ பன்னீர்செல்வம் தனது தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அதிகாரபூர்வ அதிமுக வேட்பாளர் ஆகிவிட்டார். இவருக்கு இரட்டை இலை சின்னம் கொடுக்கப்பட்டுவிட்டது. இதையடுத்து கே.எஸ் தென்னரசு இன்று வேட்புமனுவும் தாக்கல் செய்துவிட்டார். தாக்கல் செய்ததோடு ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் அவர் பிரச்சாரத்தையும் தொடங்கிவிட்டார்.இந்த நிலையில்தான் அதிமுகவில் நடக்கும் மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் அளித்த பேட்டியில், எம்ஜிஆர் இறந்த போது அதிமுகவில் ஜானகி அணி, ஜெயலலிதா அணி இருந்தது. அப்போது ஜெயலலிதாவிற்குத்தான் பலம் இருந்தது. ஆனால் ஜானகி அணி ஜெயலலிதாவிற்கு செல்ல வேண்டிய வாக்குகளை பிரித்தார். ஜானகி அப்போது வாக்குகளை பிரிக்கும் சக்தியாக இருந்தார். அதேபோல்தான் ஜெயலலிதாவை போல எடப்பாடி இருக்கிறார். அவரால் குறிப்பிட்ட இடங்களை வெல்ல முடியும். ஆனால் அதை ஜானகி தடுத்தது போல ஓபிஎஸ் தடுக்கிறார். ஓபிஎஸ்ஸால் தனியாக வெல்ல முடியாது. அவர் எடப்பாடி வெல்வதையும் தடுக்கிறார். அதனால்தான் எடப்பாடி - ஓ பி எஸ் ஒன்றாக இருக்க வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

அதிமுக தோல்வி
ஆனால் எடப்பாடியோ அதெல்லாம் இல்லை. அதிமுக தோல்வி அடைந்தால் தோல்வி அடையட்டும். ஆனால் நான்தான் அதிமுக. எனக்கு கீழ்தான் அதிமுக இருக்கும் என்பதில் எடப்பாடி உறுதியாக இருக்கிறார். தான் செய்வதில் அவர் தெளிவாக இருக்கிறார். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திற்கு அந்த நம்பிக்கை இல்லை. காரணம் அவரால் ஜெயிக்க முடியாது. அதனால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் ஆதரவை நாடுகிறார். கட்சி எடப்பாடியிடம்தான் இருக்கிறது. வேறு வழியில்லாமல் பாஜகவின் உதவியை ஓ பன்னீர்செல்வம் நாடுகிறார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம் இரண்டு பேரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற தொனியில் தீர்ப்பு வழங்கி உள்ளது. இடைக்கால தீர்ப்புதான். ஆனால் இரண்டு பேருமே திருந்துவது போல இல்லை. ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிகளுக்கு கொண்டாட்டம் என்பார்கள். அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது. அந்த கூத்தாடிகள் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். இது அரசியல் பிரச்சனை. இதற்கு கோர்டிற்கு சென்று இருக்கிறார்கள். இதில் கிடைக்கும் தீர்வு எல்லாம் தற்காலிகம்தான். எடப்பாடி - ஓ பன்னீர்செல்வத்தை எப்படியாவது சேர்க்க வேண்டும். அவர்கள் முதுகில் பயணம் செய்ய வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

வளைக்க முடியும்
பாஜக நினைத்தால் ஓ பன்னீர்செல்வத்தை வளைக்க முடியும். ஆனால் பாஜகவால் எடப்பாடியை வளைக்க முடியாது. அமலாக்கத்துறை, சிபிஐயை வைத்து பாஜக எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது. எடப்பாடி நினைத்தால் தூக்கி போட்டுவிட்டு சென்றுவிடுவார். ஒரு லெவலுக்கு மேல் எடப்பாடியை வளைக்க முடியாது. எடப்பாடியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் அவர்கள் ஓ பன்னீர்செல்வம் பக்கம் இருக்கிறார்கள். தங்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் இருக்க வேண்டும். அவரை மூலம் அதிமுகவை கவிழ்க்க வேண்டும். அதிமுகவை பாஜக வசம் கொண்டு வர வேண்டும் என்று பாஜக நினைக்கிறது.

ஓ பன்னீர்செல்வம்
அதனால்தான் ஓ பன்னீர்செல்வம் பக்கம் பாஜக இருக்கிறது. ஆனால் எடப்பாடி இதை எதிர்க்கிறார். இதனால்தான் எடப்பாடியை பாஜக சப்போர்ட் செய்வது இல்லை. வேட்பாளரை களமிறக்கிவிட்டு எடப்பாடி அதில் உறுதியாக இருந்தார். ஆனால் ஓ பன்னீர்செல்வமோ.. பாஜக வேட்பாளரை நிறுத்தினால் வாபஸ் வாங்குவேன் என்கிறார். இதிலேயே பாஜகவின் ஆள் யார் என்பது தெரியவில்லையா? எடப்பாடி கையில்தான் அதிமுக இருக்கிறது. அதனால் ஓ பன்னீர்செல்வம் பாஜகவின் பின்னால் சுற்றிக்கொண்டு இருக்கிறார், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
சான்ஸை தட்டிப்பறித்த சிவி சண்முகம்.. குறுக்கே வந்த வக்கீல்.. எடப்பாடிக்கு தலைவலியாக மாறிய "பசுபதி" -
எடப்பாடி பழனிச்சாமி சாமர்த்தியம்.. பாஜகவை கண்ட்ரோல் செய்துட்டாரே.. தொகுதி ஒதுக்கீட்டில் ஓங்கிய அதிமுக கை! -
பெரம்பூரில் தனி வீடு வாங்கும் விஜய்.. 'அந்நியன்' இமேஜை உடைக்க மாஸ்டர் பிளான்.. களமிறங்கிய ப்ரோக்கர் -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
நாங்கள் எல்லாம் சிவி சண்முகத்தின் அடிமைகளா? பலிகடா ஆகணுமா? பொங்கி எழுந்த ரத்தத்தின் ரத்தங்கள் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா?












Click it and Unblock the Notifications