ஆ.ராசாவுக்கு சிக்கல்? இந்துக்கள் பற்றி பேச்சு! விஷயத்தை லோக்சபாவுக்கு எடுத்த சென்ற பாஜக! பரபர புகார்
சென்னை: இந்து மதம் குறித்த திமுக எம்பி ஆ. ராசா கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக நாடாளுமன்றத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ. ராசா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அதில் அவர் பேசிய பேச்சு இணையத்தில் சர்ச்சையானது.
அவர் இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசிவிட்டதாகவும் அவரது பேச்சால் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தன.

என்ன பேசினார்
அந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி ஆ. ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்" என்று அவர் பேசி இருந்தார்.

போராட்டம்
இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த பாஜகவினர் ஆ. ராசா இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் பேசிவிட்டதாகவும் இந்த விவகாரத்தில் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. தமிழ்நாடு முழுக்க போராட்டம் பாஜகவினர், இந்து முன்னணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், பல இடங்களிலும் போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

மக்களவையில் புகார்
இந்நிலையில், இந்த விவகாரத்தைத் தமிழக பாஜக இப்போது நாடாளுமன்றத்திற்கும் எடுத்துச் சென்றுள்ளது. பாஜகவின் மாநில ஐடி பிரிவு தலைவர் நிர்மல் குமார், நாடாளுமன்றத்தில் ஆ. ராசாவுக்கு எதிராகப் புகார் அளித்து உள்ளார். இந்துக்களுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாக மக்களவை சபாநாயகரிடம் கொடுக்கப்பட்ட அந்த புகாரில் கூறப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிடத் தடை
தனது புகாரில் அரசியல் ஆதாயத்திற்காக அவர் இந்துக்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சைப் பேசி உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள நிர்மல் குமார், லோக்சபாவில் அலுவல் நடத்தை விதி 233A(4)ன் கீழ், இந்துக்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக ஆ. ராசாவை எதிர்காலத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் தனது புகாரில் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவுக்கு எதிராகக் கொடுக்கப்பட்டுள்ள இந்த புகார் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

ஆ. ராசா
பாஜக உள்ளிட்டோர் புகார் அளித்த போதிலும் இந்த விவகாரத்தில் ஆ. ராசா உறுதியாக உள்ளார். நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கூட அவர், "இந்துக்களைப் புண்படுத்திவிட்டார். ஆ. ராசா மன்னிப்பு கேட்க வேண்டும் என்கிறார்கள். மன்னிப்பு கேட்பது பெரிய விசயம் இல்லை. நான் 2ஜியையே பார்த்தவன். இந்த வேலையை என்னிடம் வைத்துக்கொள்ளக்கூடாது.

அடுத்து என்ன
அப்போது இருந்த இந்து மதத்தில் இதெல்லாம் இருந்தது என்றும் இப்போது இல்லை என பாஜகவின் திருப்பதி நாராயணன் சொன்னார். அது சரி. ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவியோ சனாதனம் உள்ளது என்கிறார்" என்று கூறி இருந்தார். இந்தச் சூழலில் நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவுக்கு எதிராகப் புகார் கொடுக்கப்பட்டு உள்ள நிலையில், அடுத்து இந்த விவகாரம் எப்படிச் செல்லும் என்பதைப் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.
-
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
BJP- TVK- DMK: தவெகவில் இருந்து விலகிய நடிகை ரஞ்சனா நாச்சியார் திமுகவில் ஐக்கியம்! -
2021ல் திமுக vs அதிமுக.. எந்த மண்டலத்தில் எந்தெந்த கட்சி ஆதிக்கம் செய்தது? தமிழ்நாடு MAPஐ பாருங்க! -
2 தொகுதிகளில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் ரங்கசாமி.. புதுச்சேரி முதல்வரின் 2 சீட் வெற்றி ஃபார்முலா -
ஸ்டாலின் டூ அண்ணாமலை வரை... 2021 தேர்தலில் டாப் 10 லீடர்கள் தொகுதிகளின் ரிசல்ட் இதுதான்.. ரீவைண்ட் -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
மதுரையில் 8 தொகுதிகளில் உதயசூரியன்.. வேட்பாளர்கள் தேர்வு கிட்டத்தட்ட ஓவர்.. செல்லூர் ராஜுவுக்கு செக் -
பேசியது 15 நிமிடம்.. காத்திருந்தது 2 மணி நேரம்! அமித்ஷாவை சந்திக்க ஹோட்டலில் காத்துக்கிடந்த எடப்பாடி












Click it and Unblock the Notifications