பாஜகவுக்கு இதனால்தான் இந்தத் தோல்வி கிடைத்தது.. திருநாவுக்கரசர் அட்டாக்!
சென்னை: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டதாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
5 மாநில தேர்தல்களில் பாஜகவை பின்னடைவு சந்திதுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இந்தநிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாவது: வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மோடி அலை ஓய்ந்துவிட்டது. நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக தோல்வியை தழுவும் என்றார்.
மேலும், பாஜகவிற்கு மாற்று காங்கிரஸ்; பிரதமர் மோடிக்கு மாற்று ராகுல் காந்தி என நிரூபணமாகியுள்ளது. நல்ல தண்ணீர் என கூறும் வடமாநிலங்களிலேயே தாமரை மலரவில்லை. இங்கு எப்படி மலரும்? என்று கேள்வி எழுப்பினார்.
5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர். ராகுல்காந்தியின் கடும் உழைப்பு பயன் தந்துள்ளது என்றும் கூறினார்.