செந்தில் பாலாஜி குறித்து சர்ச்சை ட்வீட்: பாஜக செல்வகுமார் அதிரடியாக கைது.. அண்ணாமலை கண்டனம்
சென்னை: தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்தும் இரு சமூகங்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் செல்வகுமார் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் பாஜக நிர்வாகி செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார் இன்று காலை 8.15 மணி அளவில் தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழக பாஜக தொழில் பிரிவு துணைத் தலைவர் செல்வகுமார், தனது சமூக வலைதள பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, செந்தில் பாலாஜி உள்பட பலரை கடுமையாக விமர்சித்து வந்தார்.

குறிப்பாக செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் போட்ட ட்வீட் பதிவுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. செந்தில் பாலாஜி குறித்து செல்வகுமார் நேற்று வெளியிட்ட பதிவில், செந்தில் பாலாஜியிடம் மட்டுமே 1.0 லட்சம் கோடிக்கு மேல் சொத்து இருக்கும். அவர் கமிஷன் கறப்பதில், திருடுவதில் வல்லவர். நீயும் திருடு எனக்கும் பங்கு கொடு என்ற டீலிங் அடிப்படையில்தான் அவர் அமைச்சராக்கப்பட்டுள்ளார் என்று கூறியிருந்தார்.
இன்னொரு பதிவில், கோவைக்கு பொறுப்பு அமைச்சராக செந்தில் பாலாஜி வந்த பிறகு அனைத்து விதமான போதை பொருட்கள் விற்பனையும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டு இளைஞர்களின் வாழ்வு சீரழிக்கப்படுகிறது.

போதைபொருட்கள் விற்பனையை தடை செய்து மக்களை போதை பழக்கத்தில் இருந்து மீட்க வேண்டிய கடமை கஞ்சாபாலாஜியின் துறைக்கே. ஆனால், அமைச்சரோ தன்னுடைய கரூர் கம்பெனி கூடுதலாக சம்பாதிக்க போதை பொருட்கள் விற்பனையை ஊக்குவித்து வருகிறார் என்று பாஜக ஐடிவிங் தலைவர் செல்வகுமார் குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்டதாக பாஜகவின் தொழில் பிரிவு துணைத் தலைவர் செந்தில்குமார் கைது செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவலை பாஜகவைச் சேர்ந்த அமர்பிரசாரத் ரெட்டி டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். பாஜக ஐடிவிங் நிர்வாகிகள் பலரும், செல்வகுமார் கைது செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளனர்.

இநநிலையில் தமிழக பாஜக தொழில்துறை பிரிவு மாநிலத் துணைத் தலைவர் செல்வகுமார் அவர்களைக் கைது செய்துள்ள
திமுக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட் போட்டிருக்கிறார. ஆளுங்கட்சியின் தவறுகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களைக் கைது செய்வதன் மூலம் ஆளுங்கட்சிக்கு எதிரான குரல்களை அடக்கி, கருத்துச் சுதந்திரத்தை முடக்கி விடலாம் என்று கனவு காண்கிறது திறனற்ற திமுக அரசு. இதற்கெல்லாம் நாங்கள் அஞ்சுபவர்களில்லை என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.
-
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
அதிமுக கூட்டணியில் தவெக விஜய்? மத்திய அமைச்சர் எல்.முருகன் சொன்ன பதிலால் பரபரப்பு! -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
கரூர் கேஸ்! விஜயுடன் சேர்த்து செந்தில் பாலாஜிக்கும் சம்மன்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை! ஷாக் மேல் ஷாக் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலர் தாண்டாத வரை.. பெட்ரோல், டீசல் விலை உயராது.. மத்திய அரசு விளக்கம்! -
Senthil Balaji: கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கு சிபிஐ சம்மன்? -
கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ சம்மன்.. மார்ச் 17ல் நேரில் ஆஜராகி விளக்கம் கொடுக்கும் செந்தில் பாலாஜி! -
ONOE: "ஒரே நாடு ஒரே தேர்தல்.. நோயை விடக் கொடிய மருந்து" - முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு! -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான்












Click it and Unblock the Notifications