பாஜக கூட்டணியில் தேமுதிக? ட்விஸ்ட் கொடுத்த எல் முருகன்.. பெரிதாக திட்டம் போடும் என்டிஏ
சென்னை: தேமுதிக இதுவரை தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறது. இதற்கிடையே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. இதனால் தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்லும் என்பதில் மீண்டும் சஸ்பென்ஸ் எழுந்துள்ளது.
தமிழ்நாடு தேர்தலில் கூட்டணி தொடர்பாகப் பல்வேறு கட்சிகளும் தங்கள் முடிவை எடுத்து வருகிறது. இருப்பினும், தேமுதிக இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. முன்னதாக ஜனவரி 10ம் தேதி நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இருப்பினும், அந்த மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

தேமுதிக விருப்ப மனு
கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும் முன்பே, தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை ஆரம்பித்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது. பிப்ரவரி 12 விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. முதல் சில நாட்கள் விருப்பமனு வாங்கப் பலரும் ஆர்வம் தெரிவித்தாலும் இன்று பெரிதாக யாருமே விருப்பமனு வாங்கவில்லை.
பேச்சுவார்த்தை
இது ஒரு பக்கம் இருக்கக் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் என்டிஏ என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்தக் கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கிறதோ, அங்குச் சேர தேமுதிக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.
எல் முருகன்
இதற்கிடையே சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், "என்டிஏ கூட்டணியில் யார் எல்லாம் இருக்கிறோம்.. எங்கள் பலம் என்ன என்பதை மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் காட்டிவிட்டோம். ஆனால், திமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. திமுக கூட்டணிக்குப் பயம் வந்துவிட்டது.
மேலும், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தேவையான அனைத்து நிதியையும் கொடுத்துவிட்டோம். நிதியைச் செலவழித்த பிறகு அதற்கான சான்றிதழைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றினால் தான் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதை விட்டுவிட்டு எங்கள் நிபந்தனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.
முக்கிய பதில்
அப்போது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "கூட்டணி தொடர்பாகத் தேசியத் தலைமை பேசி வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, கூட்டணி குறித்து முடிவைத் தேசியத் தலைமை உரிய நேரத்தில் நிச்சயம் அறிவிக்கும்" என்றார்.
-
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
40, 50 கோடி செலவு பண்ணுவாங்க.. கையை கட்டிட்டாரு சீமான்! திரள்நிதி தான் கேக்குறாரு!உருக்கமாக வீடியோ -
அரசியல் முட்டு சந்தில் சின்னம்மா? திக்கு தெரியாமல் தவிக்கும் தைலாபுரம் அய்யா? 2026ல் போடும் கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
வதந்திகளை நம்பாதீங்க.. மதசார்பில் உறுதி! இப்தார் விழாவில் பாஜக கூட்டணிக்கு ரெட் சிக்னல் போட்ட விஜய் -
90 சீட் பேரம்? ஆதவ் அர்ஜுனா அப்படி சொன்னாரே.. இல்லவே இல்லை என திட்டவட்டமாக மறுத்த விஜய்! -
நெக்ஸ்ட் சிஎம் விஜய்? டெல்லிக்கு போன நேரத்தில் வெளியான கருத்து கணிப்பு! ப்ளான் பண்ணி பண்ணிய பனையூர்! -
சங்கீதா சொத்து மதிப்பை காட்டுவாரா? திமுக பெரிய முடிவு.. தவெக விஜய்யின் தூக்கத்தை கெடுக்கும் 2 விஷயம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
என் நிலைமைய பாத்தீங்களா? தைலாபுரம் பக்கம் தலை காட்டாத அடிபொடிகள்! புலம்பித் தவித்த அய்யா ராமதாஸ் -
சட்டசபை தேர்தலில் போட்டியிட கனிமொழி ஆர்வம்.. எந்த தொகுதி? ஸ்டாலின் கையில் முடிவு












Click it and Unblock the Notifications