Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜக கூட்டணியில் தேமுதிக? ட்விஸ்ட் கொடுத்த எல் முருகன்.. பெரிதாக திட்டம் போடும் என்டிஏ

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேமுதிக இதுவரை தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்காமல் சஸ்பென்ஸ் காத்து வருகிறது. இதற்கிடையே தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று மத்திய இணையமைச்சர் எல் முருகனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் கவனம் பெற்றுள்ளது. இதனால் தேமுதிக எந்தக் கூட்டணிக்குச் செல்லும் என்பதில் மீண்டும் சஸ்பென்ஸ் எழுந்துள்ளது.

தமிழ்நாடு தேர்தலில் கூட்டணி தொடர்பாகப் பல்வேறு கட்சிகளும் தங்கள் முடிவை எடுத்து வருகிறது. இருப்பினும், தேமுதிக இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. முன்னதாக ஜனவரி 10ம் தேதி நடந்த தேமுதிக மாநாட்டில் கூட்டணி தொடர்பான முடிவை அறிவிப்பதாக பிரேமலதா கூறியிருந்தார். இருப்பினும், அந்த மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. இதனால் தேமுதிக தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.

BJP L Murugan says talks are going and National leadership will decide about DMDK on NDA alliance

தேமுதிக விருப்ப மனு

கூட்டணி குறித்த முடிவை அறிவிக்கும் முன்பே, தேமுதிக விருப்ப மனு விநியோகத்தை ஆரம்பித்தது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் விருப்பமனு விநியோகம் செய்யப்படுகிறது. பிப்ரவரி 12 விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என தேமுதிக தலைமை அறிவித்துள்ளது. முதல் சில நாட்கள் விருப்பமனு வாங்கப் பலரும் ஆர்வம் தெரிவித்தாலும் இன்று பெரிதாக யாருமே விருப்பமனு வாங்கவில்லை.

பேச்சுவார்த்தை

இது ஒரு பக்கம் இருக்கக் கூட்டணி குறித்து தேமுதிக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக மற்றும் என்டிஏ என இரு தரப்பில் இருந்தும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை தேமுதிக நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. எந்தக் கூட்டணியில் கேட்ட இடங்கள் கிடைக்கிறதோ, அங்குச் சேர தேமுதிக முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

எல் முருகன்

இதற்கிடையே சென்னையில் பாஜக அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் எல் முருகன் சில முக்கிய கருத்துகளைக் கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், "என்டிஏ கூட்டணியில் யார் எல்லாம் இருக்கிறோம்.. எங்கள் பலம் என்ன என்பதை மதுராந்தகத்தில் நடந்த கூட்டத்தில் காட்டிவிட்டோம். ஆனால், திமுக கூட்டணியில் யார் இருக்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியவில்லை. திமுக கூட்டணிக்குப் பயம் வந்துவிட்டது.

மேலும், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை மத்திய அரசு தரவில்லை என்ற குற்றச்சாட்டில் உண்மை இல்லை. தேவையான அனைத்து நிதியையும் கொடுத்துவிட்டோம். நிதியைச் செலவழித்த பிறகு அதற்கான சான்றிதழைத் தமிழ்நாடு அரசு சமர்ப்பிக்க வேண்டும். மேலும், மத்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றினால் தான் மாநிலங்களுக்கும் நிதி ஒதுக்கப்படுகிறது. அதை விட்டுவிட்டு எங்கள் நிபந்தனைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என மாநில அரசு சொல்வதை ஏற்க முடியாது" என்றார்.

முக்கிய பதில்

அப்போது தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கப்படுமா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "கூட்டணி தொடர்பாகத் தேசியத் தலைமை பேசி வருகிறது. பேச்சுவார்த்தை முடிந்த பிறகு, கூட்டணி குறித்து முடிவைத் தேசியத் தலைமை உரிய நேரத்தில் நிச்சயம் அறிவிக்கும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+