அய்யோ பாவம் துரைமுருகன்.. வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா.. கிளறி விடும் பாஜக.. அட பழைய கதையாச்சே!
சென்னை: மூத்த அமைச்சர் துரைமுருகன், திமுக கலந்துரையாடல் கூட்டத்தில் மனம் வெதும்பி பேசியிருப்பதாக கூறி, "அய்யோ, பாவம் ஐயா துரைமுருகன்.. அவர் வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா!" எனக் கூறியுள்ளார் பாஜக நாராயணன்.
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "தாயின் மீது ஆணையிட்டு, பெத்த தாயின் வயிற்றின் மீது ஆணையிட்டு, பெத்த அப்பன் மீது ஆணையிட்டு, நம்மையெல்லாம் வளர்த்த அண்ணாவின் மீது ஆணையிட்டு, தலைவர் மீது ஆணையிட்டு, தலைவனுக்கு தலைவனாக, அண்ணாவுக்கு அண்ணாவாக இருக்கிற இந்த தளபதி மீது ஆணையிட்டு, ஒரு சபதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் கொஞ்ச நாளைக்கு தேர்தல் முடிகிற வரையில் நான் யாரிடத்திலும் பகைமை காட்ட மாட்டேன், யாரிடத்திலும் போட்டுக் கொடுக்க மாட்டேன், சில வன்நெஞ்சம் படைத்தவர்கள் இன்கம் டாக்ஸ்க்கே நம்மை பற்றி செய்தி சொல்கிற அளவிற்கு சில பேருடைய உள்ளம் மங்கி நன்றி கெட்டு மறந்து போயிருக்கிறது. அதையெல்லாம் நினைத்தால்,சில நேரங்களில், 60, 70 ஆண்டு காலம் இந்த கட்சியில் வாழ்ந்து விட்ட எனக்கு வருத்தமாக இருக்கிறது - தி மு க கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன்.

அய்யோ பாவம், உள்ளம் கலங்கி பேசியிருக்கிறார். திமுகவின் உட்கட்சி பூசலை, துரோகிகளின் கூடாரம் திமுக என்பதை, வன்நெஞ்சம் படைத்தவர்கள் திமுகவினர் என்பதை தெளிவாக கூறும் போது, திமுகவினர் நன்றி கெட்டவர்கள் என்று சொல்லும் போது அவரின் உள்ளக்குமுறலை நம்மால் உணரமுடிகிறது. 60, 70 ஆண்டு காலம் கட்சிக்கு உழைத்தவரை இப்படி போட்டு கொடுத்து விட்டார்களே என்று நெஞ்சம் பதை பதைக்கிறது. இன்கம் டாக்ஸ்க்கே செய்தி சொன்னவர்கள் யாரென்று தெரிந்தும் அவர்களை குறிப்பிட முடியாத அவரின் சோகம் நெஞ்சை பிளக்கிறது. அய்யோ, பாவம் ஐயா துரைமுருகன் அவர்கள். வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா!!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுகவின் தலைமையகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், "எம்.ஜி.ஆர் யாரைக் காட்டினாலும் அவர் எம்.பி, எம்.எல்.ஏ என்ற நிலை இருந்தது. தமிழக அரசியலில் மகத்தான வல்லமை பெற்றிருந்த எம்.ஜி.ஆரையே, லோக்சபா தேர்தலில் ஜீரோ வாங்க வைத்த பெருமை திமுகவைச் சேரும்.
முதலில் நமக்குள் ஒற்றுமை தேவைப்படுகிறது. ஒருவருக்கொருவர் காட்டும் மனக் கசப்பு ஸ்டாலின் உள்பட முன்னணி தலைவர்களாகிய எங்கள் அனைவருக்கும் வேதனையைத் தருகிறது. திமுகவில் உள்ள சிலர் வருமான வரித்துறைக்கு செய்தி சொல்லும் அளவுக்கு வன்நெஞ்சம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். மனக்கசப்பு காட்டாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். தேர்தல் முடியும் வரை யாரிடமும் பகைமை காட்ட மாட்டேன் எனவும், யாரையும் போட்டுக்கொடுக்க மாட்டேன் என்றும் நிர்வாகிகள் உறுதியேற்க வேண்டும்" என்றும் கேட்டுக்கொண்டார்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலின்போது வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் போட்டியிட்டார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு துரைமுருகனுக்கு நெருக்கமானவரின் வீட்டில் இருந்து வாக்காளர்களுக்கு அளிக்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி 10 கோடி ரூபாய் அளவுக்கான பணம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து துரைமுருகன் வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை நடைபெற்றது. இதனை மனதில் வைத்தே அப்போது நிர்வாகிகள் மத்தியில் அப்படி பேசினார் துரைமுருகன்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக திமுக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை ரெய்டுகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகிறது. அமைச்சர் துரைமுருகன் பொறுப்பு வகிக்கும், நீர்வளம், கனிம வளத்துறைக்கு தொடர்புடைய இடங்களிலும், மணல் குவாரிகளிலும் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்றது. இந்நிலையில், சில காலமாக சைலண்டாக இருந்து வருகிறார் அமைச்சர் துரைமுருகன்.
இந்நிலையில் தான், அமைச்சர் துரைமுருகன் முன்பு, திமுக கூட்டத்தில் பேசியதை, தற்போது பேசியது எனக் குறிப்பிட்டு எதிக்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதனை, பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, "பாவம் ஐயா துரைமுருகன்.. வயதுக்காவது மரியாதை கொடுங்கய்யா" எனப் பதிவிட்டுள்ளார்.
-
குலுங்கியது திருச்சி.. திமுக மாநாட்டில் ரேம்ப் வாக் செய்த ஸ்டாலின்! தொண்டர்கள் உற்சாகம் -
கோவையில் ஆரம்ப சுகாதார நிலையத்தை வீடாக மாற்றிக்கொண்ட திமுக பிரமுகர்.. அண்ணாமலை வீடியோ -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
45% வாக்கு உறுதி.. திமுகவின் பரபர இன்டர்னல் சர்வே.. அடித்து மேலே வரும் தவெக விஜய்.. ரகசிய ரிப்போர்ட் -
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
ஸ்டாலினின் கையில் அந்த சர்ப்ரைஸ் லிஸ்ட்.. திமுக துரைமுருகன் முதல் பொன்முடி வரை! 15 விஐபிகளுக்கு கிலி? -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
திருச்சி திமுக மாநாட்டில் கமகமக்கும் பிரியாணி.. 10 லட்சம் பேருக்கு சுடச்சுட ரெடி! -
இன்றைய டாப் 10 பேச்சுக்கள் 09/03/2026: ஸ்டாலின் முதல் சீமான் வரை கூறிய நச் கருத்துகள் -
வெல்லும் தமிழ்ப்பெண்களே! தடைகளைத் தகர்த்தெறிந்து முன்னேறுங்கள்! ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்து -
திருச்சியில் திமுக மாநாடு! 10 லட்சம் பேர் பங்கேற்பு! முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications