Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“கன்னித்தன்மை”.. தீட்சிதர் குழந்தைகளிடம் இருவிரல் டெஸ்ட்! ஆளுநர் பகீர் தகவல் - பாஜக நாராயணன் கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு 2 விரல் பரிசோதனை செய்ததாக ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்திய நிலையில் தமிழ்நாடு பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி பல்வேறு கேள்விகளை டிஜிபி சைலேந்திர பாபுவிடம் எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் பதிவிட்டு இருப்பதாவது, "சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்ததாக பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் பரப்பப்பட்டு வருகின்றன என்றும், அவை உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் ஆகும் என்றும் தமிழக காவல் துறை தலைவர் (டிஜிபி) அவர்கள் கூறியுள்ளது வியப்பளிக்கிறது.

 BJP Narayanan questioned DGP Sylendra babu on Chidambaram Dikshitar Children issue

சட்டவிரோதமாக, மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளவர் தமிழகத்தின் தலைவர் அல்லது தமிழகத்தை ஆட்சி செய்பவரான மேதகு ஆளுநர். ஆனால், டிஜிபி அவர்கள் ஆளுநருக்கு பதிலளிக்காமல் ஊடகங்கள் பரப்புவதாக சொல்வது விசித்திரமாக உள்ளது வியப்பளிக்கிறது.

மேலும், "சட்ட ஆலோசகரின் அறிவுரைப்படி, இரண்டு சிறுமியர் மட்டும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டனர். அவர்களிடம், பெண் டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அவர்களை இருவிரல் கன்னித்தன்மை பரிசோதனைக்கு உட்படுத்தவில்லை" என்றும் கூறியுள்ளார் டிஜிபி அவர்கள். குழந்தை திருமணம் நடந்ததாக அளிக்கப்பட்ட புகாருக்கு பெற்றோர்கள் மீது நடவடிக்கை எடுத்ததோடு நில்லாமல், குழந்தைகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியது ஏன்?

 BJP Narayanan questioned DGP Sylendra babu on Chidambaram Dikshitar Children issue

குழந்தைகளை வீட்டிலிருந்து வெளியே அழைத்து சென்றது ஏன்? அதற்கு அனுமதி அளித்தது யார்? அந்த குழந்தைகள் தாங்கள் தாக்கப்பட்டதாகவோ அல்லது துன்புறுத்தப்பட்டதாகவோ புகார் அளித்தனரா? அப்படி புகார் அளிக்கப்பட்டிருந்தால் அதன் முதல் தகவல் அறிக்கை எங்கே? குழந்தை திருமணம் நடத்தியதற்கு மருத்துவ பரிசோதனை செய்ய சட்டத்தில் இடமிருக்கிறதா? உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் படி குழந்தைகளை எந்த விதமான சோதனைக்கும் உட்படுத்தக்கூடாது என்பது தெரியாதா?

அப்படி வீடு புகுந்து அந்த குழந்தைகளை அழைத்து சென்ற காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? முறையான காரணம் இல்லாமல் குழந்தைகளை மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதா? சிறு குழந்தைகளை மன உளைச்சலுக்கு உள்ளாக்க வேண்டிய அவசியம் என்ன?

சட்ட விரோதமாக அந்த குழந்தைகளை அழைத்து சென்று பரிசோதனை செய்திருந்தால், அழைத்து சென்ற காவல்துறையினர் மற்றும் பரிசோதனை செய்த மருத்துவர்கள் மீது POCSO சட்டம் பாய வேண்டுமா இல்லையா? மேலும், கடந்த 25/10/2022 அன்று இரு தீட்ஷிதர் குடும்பங்கள், காவல்துறையினர் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்ற விதிமுறைகளை மீறி குழந்தைகளை விசாரணை மற்றும் பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து கடிதம் எழுதியுள்ளதை டிஜிபி மறுப்பாரா?

 BJP Narayanan questioned DGP Sylendra babu on Chidambaram Dikshitar Children issue

இன்று மறுப்பு தெரிவிக்கும் டிஜிபி அவர்கள், அந்த கடிதங்ககளின் குற்றச்சாட்டுக்கு அப்போதே மறுப்பு தெரிவிக்காதது ஏன்? குழந்தைகளின் தாயாரை இரவு 11.30 மணி வரை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாக அவர்கள் குறிப்பிட்டதை மறுப்பாரா டிஜிபி? ஆறு மாதங்களுக்கும் மேலாக அந்த குடும்பங்களின் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்காதவர் நேற்று திடீரென அதை மறுப்பதற்கென்ன காரணம்?

குற்றச்சாட்டு கடுமையானது என்பதோடு குற்றச்சாட்டை முன் வைத்தவர் ஆளுநர் என்பதாலும், இந்த விவகாரத்தை இன்று சில அமைச்சர்களும் மறுத்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணையை உறுதி செய்ய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை நடத்த டிஜிபி அவர்கள் தயாரா? அதுவரை பாதிக்கப்பட்ட அந்த பெண் குழந்தைகள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். உண்மைகள் வெளிவர வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும்." என்று குறிப்பிட்டு உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+