"லியோனி" கைதாவாரா?.. "காலி நாற்காலியை பார்த்துபேச நான் என்ன பாஜககாரனா".. போலீசுக்கு ஓடிய இந்துமுன்னணி
திண்டுக்கல் லியோனி மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: திண்டுக்கல் லியோனி மீது, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான நடவடிக்கை வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
Recommended Video
பட்டிமன்ற பேச்சாளராக அறிமுகமாகி, பிறகு பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் திண்டுக்கல் ஐ.லியோனி... இப்போது தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராகவும் உள்ளார்..
இவரது பேச்சுக்கள் இணையத்தில் வைரலாகி வருவது வழக்கம்.. அந்த வகையில், திருமாவளவன் 60வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், லியோனியும் பங்கேற்றார்.

லியோனி
அப்போது அவர் பேசிய பேச்சில் பெரும்பாலும், பாஜகவை சீண்டி பேசியிருந்ததாக கூறப்படுகிறது.. அதன் சுருக்கம் இதுதான்: "சிறுத்தை விலங்கை திருமாவளவன் ஏன் தேர்ந்தெடுத்தார் என்று தெரியவில்லை.. 5 கிமீ தொலைவில் பார்க்கக்கூடிய ஆற்றல் சிறுத்தைக்கு உண்டு.. மணிக்கு 120 வேகத்தில் ஓடும்.. அதுகுட்டி போடும்போது 5 கிலோதான் இருக்கும்..

கழுகுகள்
ஒரு கழுகுகூட தூக்கி செல்லும் எடை குறைவானதுதான் சிறுத்தை. ஆனால், அந்த கழுகுகளிடமிருந்தும், மற்ற எதிர்ப்புகளிடம் இருந்தும், தன்னைத்தானே பாதுகாத்து ஒருங்கிணைக்கக்கூடிய ஆற்றல் சிறுத்தைக்கு உண்டு.. கிராமங்களில் இருக்கும் கிராமப்பெண்கள் திருமணம் முடிந்து வாழ வேண்டும் என்பதற்காக தன்னுடை ய திருமணத்தை தியாகம் செய்து இங்கு உட்கார்ந்திருக்கிறார் திருமாவளவன்.. அவரை ஒரு சாதீயய சங்க தலைவராக என்னால் பார்க்க முடியவில்லை..

கமெண்ட்கள்
இப்போது திருவள்ளுவரையே ஜாதிக்குள் கொண்டு வந்துவிட்டு, பிளான் போட்டுட்டு இருக்காங்க.. மாப்பிள்ளை ஐயர் மாதிரி இருக்கார் இல்ல.. அவர் உட்கார்ந்திருக்கிற சைஸ், யாகம் வளர்க்கிற மாதிரியே இருக்குது இல்லை.. லைட்டா தோளில் நூல் இருக்கு இல்லே.. இப்படியெல்லாம் கமெண்ட்களை போடுகிறார்கள்.. ஆனால், அவர் எதிலுமே அடங்கவில்லை.. இப்படித்தான், தஞ்சாவூரில் 2 பேர் பேசிக்கிறாங்க.. மாப்பிள்ளை, திருவள்ளுவர் நம்ம ஆள் மாப்பிள்ளை.. மறைச்சிட்டாங்க.. நம்ம சாதியை பற்றிதான் திருக்குறளில் 2 முறை சொல்லியிருக்காரு.. அறிவுடையவர் எல்லாம் "உடையார்"

உடையார்
நான் பொதுவாக எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் எவ்வளவு நேரம் பேசுவது என்று கேட்பேன்.. நீங்க எவ்வளவு நேரமாவது பேசுங்க.. நாங்க 10 நிமிஷத்தில் போயிடுவாம் என்று சொல்வார்கள்.. ஆளில்லாமல் வெறும் நாற்காலியை பார்த்து பேசறதுக்கு நான் என்ன பாஜககாரனா?அதிமுககாரனா? " என்று பல்வேறு விஷயங்களை பேசினார் லியோனி.. இந்த வீடியோ இணையத்தில் வைரலானதையடுத்து, பாஜக உட்பட இந்து முன்னணி தரப்பு ஆவேசமாகி வருகிறது.

கமிஷனர் அலுவலகம்
இதனிடையே, இந்து மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வரும் திண்டுக்கல் லியோனியை கைது செய்ய வேண்டும் என்று பாரத் இந்து முன்னணி இயக்கம் சார்பில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது... லியோனி பல்வேறு மேடைகளில் தொடர்ந்து இந்து மதத்தைக் குறித்தும், இந்து மத வழிபாடுகளை குறித்தும் அவதூறு கருத்துக்களை பேசி வருவதால் அவரை கைது செய்ய வேண்டும்" என்று பாரத் இந்து முன்னணி இயக்கம் தன் புகாரில் தெரிவித்துள்ளது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications