Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்!
சென்னை: இந்திய கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்காததும், பங்கேற்ற மற்ற தோழமை கட்சிகள் காங்கிரஸ் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை வைத்திருப்பதும் இந்தியா கூட்டணியை பலவீனப்படுத்தியிருக்கிறது. இப்படி இருக்கையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பாஜக தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் கொண்டு வர முயற்சித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்கள் தொகைக்கு ஏற்ப மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றி அமைப்பதே இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். இந்த மசோதாவை கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. ஆனால் மூன்றில் 2 பங்கு ஆதரவு இல்லாததால் மசோதா நிறைவேறவில்லை.

இந்தியா கூட்டணி
அப்போது இந்தியா கூட்டணியில் திமுக வலிமையான கட்சியாக இருந்தது. எனவே எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து இந்த மசோதாவை தோற்கடித்தன. இப்போது தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கத்தின் தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணியை பலவீனமாக்கியிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் தேர்தலுக்கு முன்பு வரை திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்கு பின்னர் தவெக கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது.
வெளியேறிய திமுக
இதன் காரணமாக திமுக கடும் அதிருப்பதியில் இருக்கிறது. எனவேதான் சமீபத்தில் நடைபெற்ற இந்தியா கூட்டணி கூட்டத்தில் திமுக பங்கேற்கவில்லை. மட்டுமல்லாது காங்கிரஸை கடுமையாக விமர்சித்து டெல்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் நடைபெறும் பகுதியில் பேனர்களையும் வைத்திருந்தது. மறுபுறம் திரிணாமுல் காங்கிரஸ் இரண்டாக உடைந்திருக்கிறது. எனவே மம்தா பானர்ஜி குழப்பத்தில் இருக்கிறார். இது தவிர, கேரளத்தில் சிபிஎம் கட்சியை காங்கிரஸ் கையாண்ட விதம், காம்ரேட்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது.
இந்த அதிருப்தியை இந்தியா கூட்டணி கூட்டத்தில் கூட்டணி கட்சிகள் கொட்டி தீர்த்திருக்கின்றன. ஆக மொத்தம் இப்போது இந்தியா கூட்டணி கடுமையாக பலவீனமடைந்திருக்கிறது என்பதுதான் உண்மை.
பாஜகவின் பிளான்
இந்த பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை திட்டத்தை செயல்படுத்தலாம் என்று பாஜக கணக்கிட்டு வருகிறது. இதற்காக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு போன்ற மூத்த தலைவர்கள் மூலம் திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளின் முக்கிய எம்பிக்களுடன் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கான வழிகளை பாஜக திறந்து வைத்துள்ளது.
மக்களவையில் பாஜகவின் கணக்கு
இந்த மசோதா நிறைவேற 3ல் 2 பங்கு.. ஆதாவது மொத்தம் 362 எம்பிக்கள் மக்களவையில் ஆதரவளிக்க வேண்டும். 3 எம்பிக்கள் மரணமடைந்ததால், பெரும்பான்மை எண்ணிக்கை 360 என இருக்கிறது. இப்போதைக்கு பாஜகவின் பலம் 293. இங்குதான் திரிணாமுல் காங்கிரஸின் ஆட்டம் இருக்கிறது.
திரிணாமுல் காங்கிரஸில் குழப்பம்
மம்தா பானர்ஜி தலைமையில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை ஏற்கெனவே அக்கட்சியின் ரித்தோ பிரித்தோ பானர்ஜி கைப்பற்றிவிட்டார். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக அவர்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதேபோல, கட்சியிலிருந்து விலகியிருந்த திரிணாமுல் எம்பி காகோலி கோஷ் தஸ்தி தலைமையில் 20 திரிணாமுல் எம்பிக்கள் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றனர். இவர் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக வெளிப்படையாக பேசி வருகிறார்.
அப்படியெனில், மக்களவையில் மொத்தமுள்ள 29 திரிணாமுல் எம்பிக்களும் பாஜகவுக்கு ஆதரவு கொடுத்தால், பாஜகவின் பலம் 322 என அதிகரித்துவிடும்.
திமுகவுடன் பேச்சுவார்த்தை
அதேபோல காங்கிரஸ் மீது திமுக அதிருப்தியில் இருப்பதால், அக்கட்சியின் எம்பிக்களிடம் நிபந்தனையின் அடிப்படையில் ஆதரவு கேட்க பாஜக முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவுக்கு 22 எம்பிக்கள் இருக்கிறார்கள். அவர்களின் ஆதரவும் கிடைத்தால் பாஜகவின் பலம் 344 என அதிகரிக்கும். இதுபோக.. சிவசேனா உத்தவ் தாக்ரே கட்சியிலிருக்கும் 9 எம்பிக்களில் 6 பேரிடம் பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதுவும் சேர்ந்தார் 350 ஆதரவு கிடைத்துவிடும்.
இன்னும் 10 எம்பிக்களை எப்படியாவது தேடி பிடித்து சேர்த்துக்கொள்ளலாம் என்று பாஜக முடிவெடுத்திருக்கிறது. இது மட்டும் நடந்தால் தொகுதி மறுவரையறை மசோதா வெற்றி பெற்றுவிடும்.
-
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
90 நிமிடங்கள் நடந்த மீட்டிங்.. ராகுல் தலைமையை ஏற்கும் மம்தா? கச்சிதமாக காய் நகர்த்தும் காங்கிரஸ் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
காங்கிரஸில் ஐக்கியமாகும் திரிணாமுல்.. சோனியா காந்தியுடன் மம்தா ரகசிய மீட்டிங்.. அதிரும் டெல்லி! -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
காலை தொட்டு கேட்கிறோம்.. எங்களை சேர்த்துக்கோங்க.. தவெகவினரிடம் மேடையில் கெஞ்சிய அதிமுக நிர்வாகி -
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்!











Click it and Unblock the Notifications