Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள்- பாஜக நடிகை விஜயசாந்தி பகீர் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகின்றனர் என்று பாஜகவை சேர்ந்த நடிகை விஜயசாந்தி பகீர் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

அரியலூர் மாணவியின் மரணம் தொடர்பாக பாஜக டெல்லி தலைமை நடிகை விஜயசாந்தி, சித்ராராய் வாகு, சந்தியா ராய், கீதா விவேகானந்தா ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்துள்ளது. இக்குழு, அரியலூர் மாணவி கட்டாய மதமாற்றத்தால்தான் தற்கொலை செய்து கொண்டதாக தொடர்ந்து கூறி வருகின்றனர்.

இக்குழுவினர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இச்சந்திப்பின் போது நடிகை விஜயசாந்தி கூறியதாவது: மதமாற்றம் குறித்து அரியலூர் மாணவி வீடியோவில் தெளிவாக கூறியுள்ளார். இல்லாத விசயத்தை நாங்கள் பேச மாட்டோம். மாணவியின் மரணம் தொடர்பாக அனைத்து கோணத்திலும் விசாரிக்கிறோம்.

 கட்டாய மதமாற்றம்

கட்டாய மதமாற்றம்

மதமாற்றக் குற்றச்சாட்டை மாணவியின் குடும்பத்தினரே முன்வைத்துள்ளனர்; நாங்கள் புதிதாக பேசவில்லை. அரியலூர் மாணவியின் தந்தை 25 ஆண்டுகால திமுக உறுப்பினர். மாவட்ட ஆட்சியரிடம் நேற்று நாங்கள் பேசினோம். இந்த வழக்கு சிபிஐயிடம் இருப்பதால் அவர் அதிகமாக எதுவும் கூறவில்லை. இறந்த மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். மாணவியின் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ1கோடி இழப்பீடு வழங்க வேண்டும். வரும் காலத்தில் யாரும் கல்வி நிறுவனங்களில் குழந்தைகளிடம் மதமாற்றத்திற்காக வற்புறுத்தக் கூடாது என்பதுதான் குழுவின் நோக்கம்.

 முதல்வர் ஏன் மவுனம்?

முதல்வர் ஏன் மவுனம்?

அரியலூர் மாணவி வீடியோவில் கூறியதால்தான் மதமாற்றம் தொடர்பான உண்மை வெளியில் தெரிந்தது. இதுபோல பல இடங்களிலும் நடக்கலாம். இதில் அரசியல் செய்வது எங்களது நோக்கம் இல்லை. மாணவியை அவரது சித்தி கொடுமைப்படுத்தியாக கூறுவது தவறான தகவல். இந்த வழக்கை திசை திருப்பும் முயற்சி இது. தமிழக அரசு கிறிஸ்தவ மதத்திற்கு ஆதரவாக இருக்கிறது. இந்தியாவில் 80 சதவீதம் இந்துக்களே இருக்கின்றனர். மாணவியின் மரணம் தொடர்பாக முதல்வர் அனைத்து தரப்பிலும் விசாரிக்க வேண்டும். படிப்பில் சிறந்த இந்து மாணவிகளை மதம் மாற்றுகிறார்கள். இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளது. திமுக அரசு, தமிழக கலாசாரத்தை மாற்ற முயல்கிறது. முதலமைச்சர் ஏன் இந்த விசயத்தில் மவுனமாக இருக்கிறார்? இவ்வாறு நடிகை விஜயசாந்தி கூறினார்.

 யார் யாரிடம் விசாரணை

யார் யாரிடம் விசாரணை

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியதாவது: மாணவி தற்கொலை தொடர்பாக எங்களுக்கு தகவல் கிடைத்தது முதல் ஏழை மாணவிக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வருகிறோம். வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது எங்களுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி. மாணவி மரணம் தொடர்பாக நால்வர் குழு தனது விசாரணை அறிக்கையை பாஜக தலைவர் ஜே.பி. நட்டாவிடம் வழங்குவர். மாணவியின் அருகில் உள்ள வீட்டாரிடமும் , உறவினர்களிடமும் மரணம் குறித்து கேட்டறிந்துள்ளோம்.

 மதமாற்ற தடை சட்டம் தேவை

மதமாற்ற தடை சட்டம் தேவை

அரியலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தில் நடந்த சம்பவத்திற்கு பாஜக தேசியத் தலைமை குழு அமைத்ததன் மூலம் பெண் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளுக்கு பாஜக தேசிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். மாணவியின் மரணம் தொடர்பாக காவல்துறை செய்த தவறால் மாநில அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிஐ-க்கு சென்றுள்ள நிலையில், மாநில அரசு மேல் முறையீடு செய்யக்கூடாது. அதிமுக உட்பட பிற கட்சிகள் இந்த விசயம் குறித்து பேசாதது எங்களுக்கு வருத்தம் தருகிறது. சட்டசபையில் பேச எனக்கு முறையாக நேரம் தரப்படுவதில்லை. முறையாக நேரம் கொடுத்தால் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் குறித்து சட்டசபையில் பேசுவேன். இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+