“பிளேட்டை துடைக்கதான் வடமாநில தொழிலாளர்கள் வருகின்றனர்” எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேச்சுக்கு கண்டனம்
சென்னை: பானி பூரி விற்கவும், பிளேட்டை துடைக்கவும்தான் வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்கு வருகிறார்கள் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியிருந்த கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. அமைச்சரின் கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மதுராந்தகத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதாவது, "வடக்கே உள்ளவர்கள் ஹிந்தி பேசுவதால் ஹிந்தியை மட்டும் அவர்கள் படிக்கிறார்கள். இந்த காரணத்தால் வேலை வாய்ப்பு இல்லாமல் கட்டிட தொழிலாளியாக, டேபிள் துரைப்பவர்களாக, பானி பூரி விற்பவர்களாக தமிழகத்துக்கு வருகிறார்கள்.

அமைச்சர் பேசியது என்ன?
நம்முடைய மாணவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று இருக்கிறார்கள். வெளிநாடுகளில் சென்று கோடி கோடியாய் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஏனெனில், இரு மொழிக் கொள்கையில் ஆங்கிலம் படித்ததுதான் காரணம். எல்லா கிராமத்தை சார்ந்தவர்களும் வெளிநாடு சென்று வேலைவாய்ப்பு பெறக்கூடிய கம்ப்யூட்டர் படிக்கும் வாய்ப்பை கலைஞர் உருவாக்கி கொடுத்திருக்கிறார்" என்று பேசியிருந்தார். அவரது கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிமுக எதிர்ப்பு
அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன், அமைச்சரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் பொருளாதார மற்றும் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு சமீபத்திய தாக்குதல்களை சாட்சி என்றும், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயருக்கு இது களங்கம் விளைவிப்பதாகவும் விமர்சித்திருக்கிறார்.
பாஜக விமர்சனம்
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து கூறுகையில், "திமுக தொடர்ந்து வட மாநிலத்தவர்களுக்கு எதிராக வெறுப்பை துண்டி வருகிறது. இது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது. அமைச்சர் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
திமுக விளக்கம்
திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சர் யாரையும் இழிவு படுத்தவில்லை என்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் முறையான கல்வியும் வேலை வாய்ப்பும் இல்லாத காரணத்தாலே, அங்கிருந்து மக்கள் பிழைப்பு தேடி தமிழகம் வருகிறார்கள். அதைத்தான் அமைச்சர் சுட்டிக்காட்டினார் எனவும் விளக்கம் அளித்துள்ளார்.
-
“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
அண்ணனின் 5 சவரன் தங்கம் அதிரடி ஆஃபர்.. ஆடிப்போன போடி களம்! ஓபிஎஸ் போட்ட தேனி கணக்கு செட்டாகுமா? -
“குடிநீர் இன்றி கிராமமே காலி செய்ததா?”- அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு கருணாஸ் கொடுத்த பதிலடி! -
அண்ணாமலையின் டெல்லி விசிட்.. ஹெலிகாப்டர் ஏற்பாடு செய்து கொடுத்த பாஜக தலைமை.. பின்னணி என்ன? -
தவெகவில் சீட் கிடைக்காத விரக்தி.. திமுகவில் இணைந்தார் அஜிதா! பின்னணியில் அனிதா! -
கையில் கறுப்பு-சிவப்பு கயிறு.. பாக்கெட்டில் ஸ்டாலின் படம்! தென்மாவட்டங்களில் அடித்து தூக்கும் ஓபிஎஸ் -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
எகிறி அடிக்க ரெடியாகும் வில்லிவாக்கம்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு ஆப்பு! திமுக இறக்கிய முக்கிய ஆயுதம்! -
மம்தாவை தூக்கி எறியும் பாஜக? ஸ்கெட்ச் போட்டு இறங்கிய அமித் ஷா.. மேற்கு வங்கத்தில் பரபர அரசியல் களம் -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
234 தொகுதியிலும் திமுக கூட்டணிதான்.. யார் என்ன செய்தாலும் வெற்றியை தடுக்க முடியாது - ஸ்டாலின் உறுதி












Click it and Unblock the Notifications