பணமதிப்பிழப்பால் இது நடந்திருக்கிறதே; அது போதாதா; அமைச்சர் பி.டி.ஆர்.க்கு பாஜக பதிலடி!
சென்னை: பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் துறையில் கருப்பு பணத்தை பதுக்குவது தடுத்து நிறுத்தப்பட்டதாக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் யாருக்கும் எந்த பயனும் இல்லை என்றும் அந்த பாதிப்பிலிருந்து இன்னும் சாமனியர்களால் மீள முடியவில்லை எனவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புத்தக வெளியீட்டு விழாவில் நேற்று பேசிய நிலையில் அவருக்கு பதிலடி தந்துள்ளார் நாராயணன்.
இன்று சொந்த வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றால் அதற்கு காரணமே மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தான் என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

7 நகரங்கள்
''பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சொத்து விற்பனையில் கருப்புபண பரிமாற்றம் 80 விழுக்காடு குறைந்துள்ளது. ஏழு முக்கிய நகரங்களில் கிடைக்கப்பெற்ற புள்ளிவிவரங்களின் அடிப்படையில், 2013-2016 இறுதி காலாண்டுக்கு முன் உள்ள கால கட்டத்தில் 16,15,000 புதிய வீடுகள் கட்ட துவங்கப்பட்ட நிலையில், 11,78,000 குடியிருப்புகள் விற்கப்பட்டன.''

பணப்பரிமாற்றம்
''2016 இறுதி காலாண்டுக்கு பின் -2022 மூன்றாம் காலாண்டு வரையிலான காலகட்டத்தில் 9,04,000 வீடுகள் துவங்கப்பட்ட நிலையில், 10,37,000 வீடுகள் விற்கப்பட்டுள்ளன. ரியல் எஸ்டேட் தொழிலில், கருப்பு பணத்தை பதுக்கும் நோக்கத்துடன் முதலீடு செய்து வந்தவர்கள் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் கணக்கில் வராத பணத்தை பரிமாற்றம் செய்வதை நிறுத்தி கொண்டுள்ளனர்.''

விலை குறைந்தது
''தேவைக்கேற்றவாறே வீடுகள் விற்கின்ற காரணத்தினாலும், கருப்பு பணத்தை தடுத்து நிறுத்திய காரணத்தினாலும் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளன. அதனால் நடுத்தர மற்றும் புதிய வீடு வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சொந்த வீடு வாங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். ''

சொந்த வீடு
''அதாவது ஊழல், லஞ்சம், முறைகேடுகள் மூலம் கொள்ளையடிக்கும் பணத்தை சொத்துகளில் முதலீடு செய்து செயற்கையாக சந்தை விலையை அதிகரித்த சூழ்நிலையை மாற்றி, நியாயமான விலைக்கு நேர்மையானவர்கள் வாங்கும் நிலைக்கு பணமதிப்பிழப்பு நடவடிக்கை உதவி செய்துள்ளது'' என பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விளக்கம் அளித்திருக்கிறார். இதனிடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது பொருளாதார கொள்கை ரீதியாக எடுக்கப்பட்ட முடிவல்ல என்றும் அது அரசியல் உள்நோக்கத்துடன் எடுக்கப்பட்ட முடிவு எனவும் பொருளாதார அறிஞர் ஜெயரஞ்சன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications