அதிமுகவுக்கே பாஜக தான் சீட் ஒதுக்கும் போலயே.. NDA கூட்டணி சலசலப்பு.. வெடி வீசிய பெ.சண்முகம்!
சென்னை: "கூட்டணிக்கு தலைமை அதிமுக தான் என்று எடப்பாடி பழனிசாமி கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது" என சிபிஐஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் விமர்சித்துள்ளார்.
திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "திமுக அணியில் தேமுதிக இணைந்ததை வரவேற்கிறோம். சட்டமன்ற தேர்தலில் போடியிடும் தொகுதியை குறைத்துக்கொள்ள வேண்டும் என எங்களிடம் திமுக தலைமை தெரிவிக்கவில்லை. அதிமுக - பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக கடந்த முறை தொகுதிகளை குறைத்துக்கொண்டு போட்டியிட்டோம்.

இந்த முறை இரட்டை இலக்க தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பது கட்சியின் மாநிலக்குழு முடிவு. ஆகவே இரட்டை இலக்க தொகுதிகளை இம்முறை கேட்டுப் பெறுவோம். காங்கிரஸ், திமுக அணியை விட்டு வெளியேற கடுகளவு வாய்ப்பு கூட கிடையாது. இந்தியா கூட்டணி தொடர வேண்டுமெனில் காங்கிரஸ், இந்த அணியில் தான் இருந்தாக வேண்டும்.
சீட்டுகளை கூடுதலாக கேட்பது அந்தந்த கட்சியின் முடிவு. காங்கிரஸ் இந்த கூட்டணியில் நீடிப்பது கூட்டணிக்கு நல்லது. காங்கிரஸ் கட்சிக்கும் நல்லது. தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக இல்லை. எங்கள் பேச்சுவார்த்தை பாஜக உடன் தான், அதிமுகவுடன் இல்லை என டிடிவி தினகரன், ஜி.கே வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே இது இயற்கையாக உருவான கூட்டணி இல்லை என தெரிகிறது.
இதிலிருந்தே இந்த கூட்டணி கட்டாயத்தின் பேரில் உருவானது என தெரிகிறது. தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மட்டும் தான் இந்த கூட்டணிக்கு அதிமுக தலைமை எனக்கூறி வருகிறார். ஆனால், அந்தக் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் எல்லாம் பாஜகவுடன் தான் தொகுதி பங்கீடு குறித்து பேசுவோம் என்று சொல்கிறார்கள். இதை பாஜகவும் மறுக்கவில்லை. போற போக்கைப் பார்த்தால் அதிமுகவுக்கே பாஜக தான் தொகுதியை ஒதுக்கித் தரும் போலிருக்கிறது. மோடியா இந்த லேடியா என்று கேட்ட ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது.
தவெக தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்தது முதலே திமுக மீது விமர்சனம் வைத்து வருகிறார். அதை அவர் கடந்த 2ஆண்டுகளாக செய்து வருகிறார். வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களை சந்திப்போம் என விஜய் கூறுகிறார். ஒருவேளை விஜய் தோல்வி அடைந்தால் வீட்டை விட்டு வெளியே வரவே மாட்டாரா? கரூர் துயர சம்பவத்தில் தார்மீக பொறுப்பை விஜய் ஏற்றுக்கொள்ள வேண்டும். தப்பித்து செல்வது தலைவனுக்கு அழகல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
நிஜ வாழ்க்கை வேற..சினிமா வேறு.. தூங்கி எழுந்ததும் எல்லாம் மாறிவிடும்! விஜய்யை போட்டு பிளந்த எடப்பாடி -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி!












Click it and Unblock the Notifications