Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இப்போதைக்கு இதை பேச வேண்டாம்.. டெல்லியில் வானதி செய்த மூவ்.. அப்படியே ஆப் செய்த அமித் ஷா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற பாஜக தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜகவின் மாநில தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், சட்டமன்ற பாஜக தலைவர் பதவியும் அவரிடம் இருப்பதால், ஒருவருக்கு ஒரு பதவி என்பதை நிலை நிறுத்தும் வகையில் சட்டமன்ற பாஜக தலைவர் பதவியை மாற்றியமைக்க வேண்டும் என்று பாஜகவில் ரகசிய குரல் எழுந்து வருகிறது.

குறிப்பாக, அந்த பதவியில் உட்கார, பாஜக எம்.எல்.ஏ.வும் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவியான வானதி சீனிவாசன் முயற்சிக்கிறார். இதற்காக, ஜே.பி.நட்டாவிடம் அவர் பேசியிருப்பதாக தகவல் கிடைக்கிறது.

2026

என்ன பேசினார் வானதி?

நயினார் தரப்பில் விசாரித்தபோது, ''அண்ணன் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டதுமே, அடுத்து அவரது இந்த பதவிக்கு ( சட்டமன்ற பாஜக தலைவர் ) குறி வைப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால், மாநில தலைவர் பதவிக்கு நாமினேட் செய்த பிறகு, அமீத்சாவிடம் பேசிய நயினார், சட்டமன்ற பாஜக தலைவர் பதவியிலும் நான் இருக்கிறேன். அதனை ராஜினாமா செய்திடவா? என கேட்டிருக்கிறார். அதற்கு அமித் ஷா, அதை இப்போது விவாதிக்கத் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.

இதை மனதில் வைத்து, இப்போதைக்கு தேவையில்லை என்பதால் ஏதேனும் ஒரு கட்டத்தில் இந்த பதவி மாற்றியமைக்கப்படலாம் என யோசித்துத்தான் இப்போதே அந்த பதவியை நோக்கி காய்நகர்த்துகிறார் வானதி. ஆனால், ஒருவருக்கு ஒரு பதவிதான் என பாஜகவில் எந்த சட்டமும் இல்லை. டெல்லி யிலிருந்து உத்தரவு வராதவரை சட்டமன்ற பாஜக தலைவர் பதவியில் எந்த மாற்றமும் இருக்காது'' என்கின்றனர்.

நயினார் பிளானிங்

பாஜகவின் தமிழக தலைவராக பொறுப்பேற்றுள்ள நயினார் நாகேந்திரன் கட்சி ரீதியாக முக்கியமான சில நடவடிக்கைகளை எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. கட்சி ரீதியாக எந்த தலைவர் வந்தால் தனக்கு ஏற்ற நிர்வாகிகளை நியமிப்பது வழக்கம். அதாவது கடந்த தலைவர் நியமித்த நிர்வாகிகளை மாற்றுவார்கள்.

அந்த வகையில் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை நியமித்த நிர்வாகிகளை மாற்ற உள்ளார். அண்ணாமலைக்காக பணியாற்றிய.. கட்சியில் மற்ற தலைவர்களை மதிக்காத சில நிர்வாகிகளை கூண்டோடு தூக்கும் திட்டத்தில் நயினார் இருக்கிறாராம்.

அதோடு ஜாதி ரீதியாக பரவலாக பல தரப்பினருக்கு பதவி வழங்கவும் நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம். ஒரு சிலர் இன்னமும் முன்னாள் தலைமைக்கு விசுவாசமாக இருப்பதால் அவர்களை தூக்கும் திட்டத்திலும் நயினார் இருக்கிறாராம்.

சென்னையில் ரவுடிகள் பலர் கட்சியில் சேர்ந்ததாக புகார்கள் உள்ளன. இதை கணக்கெடுப்பு மேற்கொண்டு சரி செய்ய.. பலரை நீக்கவும் நயினார் திட்டமிட்டு உள்ளாராம். பாஜகவின் பல வருட திட்டம் பூத் கமிட்டி அமைப்பது. அண்ணாமலை காலத்தில் பூத் கமிட்டிகள் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் 2026 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை வேகப்படுத்த நயினார் நாகேந்திரன் முடிவு செய்துள்ளாராம்.

இதை மனதில் வைத்தே கட்சியில் நிர்வாகிகள் குழு, மாவட்ட தலைவர்கள் குழு விரைவில் கூண்டோடு மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதை எல்லாம் மே இறுதிக்குள் செய்யும் திட்டத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+