பிரதமர் மோடிக்கு எதிராக கருப்பு பலூன்! திமுகவுக்கு ஷாக் தந்த தமிழக காங்கிரஸ்!
சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று அழைப்பு விடுத்ததன் காரணமாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நாளை சென்னை வரவுள்ள நிலையில், கருப்பு பலூன்களை பறக்க விடுவோம் என காங்கிரஸ் நிர்வாகி ரஞ்சன் குமார் அறிவித்து பரபரப்பை பற்ற வைத்திருக்கிறார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எஸ்.சி.துறை மாநில தலைவர் ரஞ்சன் குமார் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

''சிறந்த கல்வி வசதி, கல்வி நிறுவனங்களில் பாகுபாடு அற்ற நிலை, ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை என இந்திய இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தார். இந்த பிரச்சினை நம்மால் நாடு முழுவதும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் 2021 வரை மட்டும் இந்தியாவில் 35 ஆயிரம் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். ''
''நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள். 2022 முதல் 2023 வரையிலான காலகட்டத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவர்கள் எண்ணிக்கையை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட விடாமல் மோடி அரசு தடை செய்துள்ளது.''
''நரேந்திர மோடி பிரதமர் ஆனதிலிருந்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.இவ்வளவு மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன? அவர்களது சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலை என்ன? இரண்டு முக்கிய விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். உண்மையை சொல்லப்போனால் தற்கொலை செய்து கொண்ட மாணவர்களில் 95 சதவிகிதம் பேர் எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர்கள்.''
''பிரதமர் மோடியின் பொய்யான வாக்குறுதியே மாணவர்கள் தற்கொலைக்கு காரணமாக அமைந்துள்ளது. 82 ஆயிரத்து 514 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கு மோடியே பொறுப்பு. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளுக்கு முடிவு கட்ட ரோஹித் வெமுலா சட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும்.''
''2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசே தூக்கி எறிய இளைஞர்கள் முன் வர வேண்டும். அதற்கு முன்னோட்டமாக நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வருகை கருப்பு பலூன்களை பறக்க விடுவோம். இளைஞர்கள் அனைவரும் திரண்டு வாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.''
-
விஜயால் வந்த ரெட் சிக்னல்.. ஸ்டாலின் மேஜைக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்.. உடனே பறந்த மேஜர் உத்தரவு! -
4 மணி நேர ‘உறக்கம்’.. பொறுப்பாளர்களை போனில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கும் ஸ்டாலின்! அறிவாலய அலர்ட்! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல்












Click it and Unblock the Notifications