சென்னையை சூழ்ந்த கருமேகம்.. கொட்டும் கனமழை... நின்னு நிதானமாக 1 மணிநேரம் பெய்யும்
சென்னையில் கருமேகங்கள் சூழ்ந்து பலத்த மழை கொட்டி வருகிறது. இந்த மழை ஒரு மணிநேரத்திற்கு மேல் நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
சென்னை: கருமேகங்கள் சூழ்ந்து சென்னையில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை தென்மேற்கு பருவமழை காலத்தின் கடைசி மழையாக இருக்கும் என்றும் பல பகுதிகளில் 1 மணிநேரத்திற்கு மேலாக பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஜூன் மாதத்தில் பெய்த தென்மேற்கு பருவமழை அக்டோபர் வரை விட்டு விட்டு பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை அடுத்த வாரத்தில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் வட தமிழக மாவட்டங்கள் குறிப்பாக நீலகிரி, கோவை, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் காரணமாக அக்டோபர் 21, 22 ஆகிய தேதிகளில் மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வடமேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் கணித்தது போல சென்னையில் மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. நகர்பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருகிறது, எழும்பூர், ராயபுரம், தி. நகர்,மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளிலும் கருமேகங்கள் சூழ்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த மழை ஒரு மணிநேரம் வரை நீடிக்கும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
கார் விற்பனையில் மாஸ் காட்டும் கொங்கு மண்டலம்.. கோவை, பொள்ளாச்சி, திருப்பூர்காரங்க வேற ரகம் பாஸ்..! -
அடித்து பெய்யப்போகும் கனமழை! கோவை டூ கன்னியாகுமரி.. 7 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! -
சென்னையில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது ஏன்? அதிகாரிகளுக்கு மட்டுமே தெரிந்த உண்மை -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
வரலாறு படைக்கும் Zoho.. டேட்டா சென்டர்களுக்கு உதவ புது சர்வர் உருவாக்கிய சென்னை நிறுவனம்! -
சென்னை ஃபுல்லா மாறப் போகுது.. போக்குவரத்து நெரிசலுக்கு பெரும் தீர்வு! ஐடிஎஸ்-ஐ கையிலெடுத்த ஆபீசர்ஸ் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications