தேமுதிக தலைவர் விஜயகாந்த், நடிகர் தனுஷ் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சியில் கோடம்பாக்கம்
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் நடிகர் தனுஷ் இல்லங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணையில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் வயது 21 என்பது தெரியவந்துள்ளது.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள திரைப்பட நடிகர் விஜயகாந்த் மற்றும் தேனாம்பேட்டையில் உள்ள நடிகர் தனுஷ் இல்லத்திற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக சரியாக மதியம் 12:56 மணிக்கு அழைப்பு வந்தது.

இதனை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜயகாந்த் இல்லத்தில் ப்ளோரா என்ற பெண் மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டதில் மிரட்டல் விடுத்ததில் அது புரளி என தெரியவந்தது. இதையடுத்து விசாரணையில் மிரட்டல் விடுத்தவர் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ் (21) என்பது தெரியவந்துள்ளது.

ஏற்கெனவே சென்னை உட்பட தமிழகம் முழுவதும் சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் நடிகர் சூர்யா அலுவலகம், நடிகர் ரஜினி, பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் விழுப்புரம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் என்பதால் போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். அதே நேரத்தில் பெற்றோரிடம் கவனித்துக் கொள்ள அறிவுறுத்தி உள்ளனர். இருப்பினும். இந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் தமிழகம் முழுவதும் இதுபோல செய்து வருவது வேதனையின் உச்சம் என அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications