ஸ்டாலின், த்ரிஷா வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்! பாஜக அலுவலகத்திற்கும் வந்த இமெயில்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் ஆழ்வார்பேட்டை இல்லம், நடிகை த்ரிஷாவின் தேனாம்பேட்டை வீடு, திநகர் பாஜக தலைமை அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
இவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து அவர்களது வீட்டிலும் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுகிறது. அது போல் ஆளுநர் மாளிகை, எஸ்.வி.சேகரின் வீடுகளுக்கும் மிரட்டல் வந்ததாக சொல்லப்படுகிறது.

யார் மிரட்டினார்கள், எதற்காக இந்த இமெயில் என்பது குறித்து தெரியவில்லை. அண்மைக்காலமாக அரசியல் பிரபலங்களின் வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. அந்த இமெயில் முகவரியும் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வருவதாக சைபர் கிரைம் போலீஸார் தெரிவிக்கிறார்கள். ஆயினும் அதை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தீவிரம் காட்டி வருகிறார்கள்.
சென்னையில், நீலாங்கரை பகுதியில் உள்ள நடிகர் மற்றும் தமிழ் வெற்றி கழகம் (TVK) தலைவர் விஜயின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலுக்குப் பின்னர், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைவாக சம்பவ இடத்திற்கு சென்று, முழுமையான சோதனைகள் நடத்தினர். இவ்வாறு நடந்த மிரட்டல், கரூர் மாவட்டத்தில் விஜயின் பிரச்சார கூட்டத்திற்கு பிறகு இந்த மிரட்டல் ஏற்பட்டது.
சென்னையில், மந்தைவெளி பகுதியில் உள்ள நடிகர் மற்றும் பாஜக முன்னணி எஸ்.வி. சேகரின் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இந்த மிரட்டல், கடந்த வாரத்தில் நடந்த மிரட்டலின் தொடர்ச்சியாக இருந்தது. முன்னதாக, போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி, மிரட்டல் பொய்யானது என கண்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications