பிரபல ஓட்டலில் மாணவனுக்கு மாத்திரை பால்.. ஆசனவாயில் தொற்று.. இவர்களெல்லாம் டீச்சர்களா? தீர்வு என்ன?
சென்னை: பிரபல தனியார் பள்ளியின் 40 வயது ஆசிரியர் ஒருவர், தன்னுடைய 16 வயது மாணவனை பலாத்காரம் செய்துள்ளார்... கடந்த 2023ம் ஆண்டிலிருந்தே இந்த கொடுமை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.. தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி, பெரும் அதிர்ச்சியை தந்து வருகின்றன..
2 மாதத்துக்கு முன்பு, சென்னை அசோக் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த சம்பவம் இதுவாகும்.. மேற்கு மாம்பலத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவனுக்கு திடீரென 1 மாத காலமாகவே, உடம்பு சரியில்லாமல் இருந்துள்ளது.

அசோக்நகர் மாணவன் நினைவிருக்கா
ஒருகட்டத்தில் மாணவனுக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆசனவாயில் ஆபரேஷன் செய்யும் அளவுக்கு நிலைமை சென்றது. அப்போதுதான், மாணவனிடம் என்ன நடந்து என்று பெற்றோர் விசாரித்திருக்கிறார்கள்..
பள்ளியில் தமிழ் ஆசிரியர் சுதாகர், பாலியல் தொந்தரவு தந்ததும், இதன்காரணமாக நோய்த்தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டதும் தெரியவந்தது.. இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பந்தப்பட்ட தமிழ் ஆசிரியர் மீது புகார் தந்தனர்.. ஆனால் பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியிருக்கிறது.
பிறகு பெற்றோர் , குமரன் நகர் போலீசில் புகார் தந்தனர்.. அப்போதும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதற்கு பிறகே ஒட்டுமொத்த பேரும் திரண்டு முற்றுகை போராட்டம் நடத்தியதில், இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது..
ஆசனவாய் தொற்று
அந்த மாணவனுக்கு உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும், கடுமையான மனஅழுத்தத்திற்கு ஆளாகியிருப்பதாகவும், பெற்றோர் கண்ணீர் மல்க கூறினார்கள்.. பிறப்புறுப்பு ஆசனவாய் உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு ஏற்படும் வகையில் செய்த ஆசிரியர் மீது ஒரு நடவடிக்கையும் கிடையாதா? என்று வேதனையுடன் சொன்னார்கள்.. இறுதியில்தான் ஆசிரியர் சுதாகர் கைது செய்யப்பட்டார்.
கடந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள தனியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்10-ம் வகுப்பு படித்து வரும் மாணவனுக்கும் இப்படியொரு கொடுமை நடந்துள்ளது.. அந்த பள்ளியின் ஹாஸ்டல் வார்டன் கவியரசன் (23) பாலியல் தொல்லை தந்துள்ளதாக கூறப்படுகிறது. மாணவனின் அம்மா, அழுதுகொண்டே கமுதி மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்திருந்தார்..
பரபரப்பு வாக்குமூலம்
மாணவனுக்கு மேற்கண்ட ஆசிரியர்களால் மட்டுமல்ல, சில ஆசிரியைகளாலும் பாலியல் சித்ரவதைகள் தரப்பட்டு வருகின்றன.. இதோ மும்பையில் நேற்று ஒரு கொடுமை நடந்துள்ளது.. இதுகுறித்து அந்த ஆசிரியையே போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்..
அதில், "நான் பிரபல தனியார் பள்ளியின் ஆங்கில ஆசிரியை, 2023-ல் பள்ளி ஆண்டு விழாவுக்கு, மாணவர்களுக்கு டான்ஸ் டிரெயினிங் தந்தபோதுதான், 11ம் வகுப்பு மாணவனிடம் எனக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. 2024 ஜனவரியில் மாணவனிடம் நெருங்க தொடங்கினேன்.
ஆனால், மாணவன் அதை விரும்பாமல் தவிர்த்தான்.. பிறகு தோழியின் உதவி மூலம் மாணவனை அணுகி, வயதான பெண்கள், வயது குறைந்த நபர்களுடன் உறவு கொள்வது சாதாரண விஷயம் என்பதை சொல்ல சொன்னேன். இதற்கு பிறகே மாணவன் என்னை சந்திக்க ஆரம்பித்தான். காரில் மாணவனை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஓட்டல்கள்
போலீசார் இதை பற்றி சொல்லும்போது, "மாணவனை பிரெயின்வாஷ் செய்து அழைத்து சென்றுள்ளார் ஆசிரியை.. அவனது ஆடைகளை வலுக்கட்டாயமாக களைந்து வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார். இதனால் மாணவன் பயந்தும், கலங்கியும் போயிருக்கிறான். உடனே மன அழுத்த மாத்திரைகளை தந்துள்ளார். பிறகு மதுப அருந்த தந்துள்ளார். பிறகு 5 ஸ்டார் ஹோட்டல்களுக்கும் அழைத்து சென்று, வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளார்.
நாளுக்கு நாள் மாணவனின் நடவடிக்கையில், அவனது பெற்றோர் கவனித்து விசாரித்தபோதுதான் மேற்கண்ட உண்மைகள் தெரிந்து, அதிர்ச்சியடைந்தனர். எனினும் +2 தேர்வு நேரம் என்பதால், இந்த விஷயத்தை பெரிதுசெய்யாமல் விட்டுவுட்டனர்.
+2 முடிந்து, மாணவன் பள்ளியை விட்டு வெளியே வந்துவிட்டான். இதனால் மாணவனை ஆசிரியையால் சந்திக்க முடியவில்லை. தன்னுடைய வீட்டில் வேலை செய்பவரை அனுப்பி, மாணவனைத் தொடர்பு கொள்ள சொன்னார். இதற்கு பிறகுதான் பெற்றோர் போலீஸூக்கு சென்றனர். சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது போக்சோ சட்டம் பாய்ந்துள்ளது.. விசாரணை நடந்து வருகிறது என்றனர்..இந்த சம்பவம் மும்பையை உலுக்கி கொண்டிருக்கிறது.
போக்சோ சட்டத்தில் கைது
நம்முடைய நாட்டில் ஏற்கனவே பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தைகளுக்கு எதிராகவும் வன்முறைகள் பெருகி வருகின்றன. இந்த குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன..
சிறார்களின் நலன் காப்பதற்காகவே போக்சோ உள்ளிட்ட எண்ணற்ற சட்டங்களும் அமலில் இருக்கின்றன.. அனைத்துக்கும் மேலாக, பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றுபவர்களை தண்டிக்க நீதிமன்றங்களும் துணை நிற்கின்றன..
ஆனாலும்கூட, ஆண் குழந்தைகளும் நாளுக்கு நாள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது அதிர்ச்சியை தந்து வருகிறது... சிறுமிகளை போலவே, சிறுவர்களுக்கும் பாதுகாப்பின்மை நிலவுவது அதிர்ச்சியையும், வேதனையையும் தந்து கொண்டிருக்கிறது..
இதற்கு தீர்வுதான் என்ன
அதிலும் ஒழுக்கத்தை கற்பிக்கக்கூடிய ஆசிரியர்களே கைதாவது வருத்தத்தை தருகிறது. அதிலும் ஆசிரியைகளே போக்சோவில் கைதாகி வருவது, அதற்குமேல் பீதியையும் கலக்கத்தையும் ஏற்படுத்தி வருகிறது.. இதுபோன்ற ஆசிரிய, ஆசிரியைகளால் மாணவ, மாணவிகளின் எதிர்காலம் மட்டுமல்லாமல், அந்த பிஞ்சு குழந்தைகளின் மனநிலைமையும் சேர்த்தே பாதிக்கப்பட்டு வருகிறது..
இதற்கெல்லாம் தீர்வு என்ன? விழிப்புணர்வு தரவேண்டியது மாணவர்களுக்கா? ஆசிரியர்களுக்கா? தெரியவில்லை.. ஆனால், போக்சோ சட்டத்தை இன்னும் கடுமையாக்கினால், பிஞ்சுகள் எதிர்காலம் ஓரளவு காப்பாற்றப்படும் என்பதை நாம் அழுத்தமாக இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது...!!!
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications