வருகிறது புரேவி.. ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக மாறியது.. மேலும் வலுவடையும்.. எங்கு நோக்கி நகரும்?
புரேவி புயல் காரணமாக எங்கெங்கு மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: வங்க கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுவடைந்து இலங்கை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் எங்கெங்கு மழைக்கு வாய்ப்பு என்றும், எந்தெந்த மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவிப்புகள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் முழுவதும் நிவர் புயல் நம்மை மிரட்டி கொண்டிருந்தது.. வங்கக் கடலில் இந்த புயல் உருவாகி புதுச்சேரி மரக்காணம் இடையே கரையை கடந்துவிட்டாலும், வட மாவட்டங்களுக்கு பலத்த மழைப்பொழிவை தந்தது. அதேபோல, ஆந்திரா, கர்நாடகா பகுதிகளுக்கும் மழையை தந்தது.

இந்நிலையில் இன்று உருவாகும் புதிய புயலான புரேவியும் அதே போன்ற மழையை தென் தமிழகத்திற்கு தரும் என்று வானிலை ஆய்வு மையம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.. இன்று வங்க கடலில் உருவாகும் இந்த புரேவி, நாளை இலங்கையை கடந்து குமரி கடலில் நிலை கொள்ள உள்ளது.
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டிருந்த இந்த புயல், இன்று அதாவது டிசம்பர் 1-ம் தேதி காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் என்றும் நாளை 2-ம் தேதி சாயங்காலம், இந்த புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் நிலை கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
அப்படியென்றால், குமரி கடல் பகுதியில் மட்டும் 2 நாட்கள் இந்த புயல் நிலை கொள்ளும் வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாகவே புயலால் தென் தமிழகத்தில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் சின்னம் காரணமாக நாகை, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
அதேபோல, கேரளாவிலும் கனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது. குமரியில் இருந்து கரையைக் கடந்து கேரளா செல்ல உள்ளதால், அங்கும் கனமழை பெய்ய உள்ளது.. தமிழகத்தில் ஏற்கனவே 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில், கேரளாவிலும் புரேவி புயல் காரணமாக பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications