புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் தொடங்குகிறது விரைவுப்பேருந்து போக்குவரத்து.. என்னென்ன விதிமுறை!
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் தீவிரமாக அமலுக்கு வந்து இருக்கிறது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.சென்னையில் மாநகர பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.

விரைவு பேருந்து
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்க உள்ளது. சாதாரண பேருந்து மட்டுமின்றி எஸ்இடிசியின் சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதே நாளில் 7 வழித்தடம் வழியாக ரயில் போக்குவரத்தும் தொடங்க உள்ளது. மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் பேருந்து புக்கிங் தொடங்குகிறது. கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விதிமுறைகள்
இதற்கான விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் பயணிக்கும் பேருந்தில் 50% பேர் மட்டுமே பயணிக்க முடியும். மொத்தம் பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளனர். 1000க்கும் அதிகமான பேருந்துகள் உள்ள நிலையில் 524 பேருந்துகள் தற்போது இயங்கும்.

கடுமையான கட்டுப்பாடு
அதேபோல் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளே பயணிகள் நுழையும் முன் அவர்களுக்கு ஹேண்ட் சானிடைசரில் கை கழுவ அனுமதிக்கப்படும். அதோடு நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பயணத்திற்கு முன் வெப்பநிலைமானியல் வெப்பம் சோதனை செய்யப்படும். வெப்பநிலை அதிகம் இருக்கும் ஊழியர்கள் , பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
-
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
தங்கம் ரூ.3000, வெள்ளி ரூ.14000 சரிவு.. மீண்டும் பல்டி அடித்தால் மக்கள் கொண்டாட்டம்..! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications