புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் தொடங்குகிறது விரைவுப்பேருந்து போக்குவரத்து.. என்னென்ன விதிமுறை!
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் தீவிரமாக அமலுக்கு வந்து இருக்கிறது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.சென்னையில் மாநகர பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.

விரைவு பேருந்து
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்க உள்ளது. சாதாரண பேருந்து மட்டுமின்றி எஸ்இடிசியின் சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதே நாளில் 7 வழித்தடம் வழியாக ரயில் போக்குவரத்தும் தொடங்க உள்ளது. மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் பேருந்து புக்கிங் தொடங்குகிறது. கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன விதிமுறைகள்
இதற்கான விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் பயணிக்கும் பேருந்தில் 50% பேர் மட்டுமே பயணிக்க முடியும். மொத்தம் பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளனர். 1000க்கும் அதிகமான பேருந்துகள் உள்ள நிலையில் 524 பேருந்துகள் தற்போது இயங்கும்.

கடுமையான கட்டுப்பாடு
அதேபோல் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளே பயணிகள் நுழையும் முன் அவர்களுக்கு ஹேண்ட் சானிடைசரில் கை கழுவ அனுமதிக்கப்படும். அதோடு நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பயணத்திற்கு முன் வெப்பநிலைமானியல் வெப்பம் சோதனை செய்யப்படும். வெப்பநிலை அதிகம் இருக்கும் ஊழியர்கள் , பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம்












Click it and Unblock the Notifications