புக்கிங் தொடங்கியது.. தமிழகத்தில் தொடங்குகிறது விரைவுப்பேருந்து போக்குவரத்து.. என்னென்ன விதிமுறை!
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
சென்னை: தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது.
தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகள் தீவிரமாக அமலுக்கு வந்து இருக்கிறது. பெரும்பாலான கட்டுப்பாடுகள் எல்லாம் நீக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க தற்போது பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. அரசு பேருந்து போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
குறைவான எண்ணிக்கையில் தற்போது பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.சென்னையில் மாநகர பேருந்துகள் இயங்க தொடங்கி உள்ளது.
ஒரு பிஷப் செய்யற காரியமா இது?.. திருச்சியிலிருந்து சென்னை வந்து.. அள்ளி சென்ற போலீஸ்!
விரைவு பேருந்து
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. மாவட்டங்களுக்கு இடையே போக்குவரத்து தொடங்க உள்ளது. சாதாரண பேருந்து மட்டுமின்றி எஸ்இடிசியின் சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. இதே நாளில் 7 வழித்தடம் வழியாக ரயில் போக்குவரத்தும் தொடங்க உள்ளது. மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில் தற்போது முன்பதிவு தொடங்கி உள்ளது. இன்று பிற்பகல் 1 மணி முதல் விரைவுப்பேருந்து போக்குவரத்துக் கழக பேருந்து முன்பதிவு தொடங்கி உள்ளது. ஆன்லைன் மூலம் பேருந்து புக்கிங் தொடங்குகிறது. கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
என்ன விதிமுறைகள்
இதற்கான விதிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 50 பேர் பயணிக்கும் பேருந்தில் 50% பேர் மட்டுமே பயணிக்க முடியும். மொத்தம் பேருந்து ஒன்றிற்கு 26 பயணிகளுக்கு மட்டுமே முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முதல் கட்டமாக 524 பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளனர். 1000க்கும் அதிகமான பேருந்துகள் உள்ள நிலையில் 524 பேருந்துகள் தற்போது இயங்கும்.
கடுமையான கட்டுப்பாடு
அதேபோல் பேருந்தில் பயணம் செய்யும் எல்லோரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. உள்ளே பயணிகள் நுழையும் முன் அவர்களுக்கு ஹேண்ட் சானிடைசரில் கை கழுவ அனுமதிக்கப்படும். அதோடு நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களுக்கு பயணத்திற்கு முன் வெப்பநிலைமானியல் வெப்பம் சோதனை செய்யப்படும். வெப்பநிலை அதிகம் இருக்கும் ஊழியர்கள் , பணிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.