Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாரத தேசத்தை யாராலும் பிளவுபடுத்த முடியாது! குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு!

Subscribe to Oneindia Tamil

ராமநாதபுரம்: இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவுபடுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்கள் அல்ல எனவும், காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள் என துணை குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

காசியில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கிய காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்தது. அதன் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் இன்று நடைபெற்றது.

இதில், இந்திய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

CP Radhakrishnan Kashi india

காசி தமிழ் சங்கமம்

நிகழ்வில் தலைமையுரையாற்றிய இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்," புனித பாரத அண்னையின் பாதத்தை தொட்டு தொடங்குகிறேன். அப்துல் காலம் பிறந்த மண்ணில் காசி தமிழ் சங்கமம் நிறைவு விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாத உறவை கொண்டது. அதனால் தான் காசியில் தொடங்கிய காசி தமிழ் சங்கமத்தின் நிறைவு விழா ராமேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது.

சி.பி.ராதாகிருஷ்ணன் உரை

நாம் நாட்டிற்கு இழுக்கு ஏற்படும் போது அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும். பாரதி கண்ட கனவு பிரதமர் நரேந்திர மோடியின் திட்டங்களால் நிறைவேறி வருகிறது. தமிழ் கலாச்சாரம் உயர்வானது, தமிழ் மொழி மேன்மையானது என கடைசி மனிதனின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். தமிழகத்தில் யார் சொத்துக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை. என்றும் மக்களில் ஒருவராக உங்களில் ஒருவராக இருப்பேன்.

பாரத தேசம்

இன்றைக்கும் என்றைக்கும் பாரத தேசத்தை யாராலும் பிளவு படுத்த முடியாது. இந்த தேசம் வாழ்க என்று சொல்லும் நாம் தமிழுக்கு எதிரானவர்களா? இல்லை. எப்படி தேசம் ஒரு கண் தேசன் என்று சொன்னால், இன்னொரு கண் தங்க தாய் மொழி நம் தமிழ் தான். அதனை யாராலும் மாற்ற முடியாது. மோடி அழகாக சொன்னார். தொன்மையான காசி நகரமும் உலகத்தின் தொன்மையான மொழியான தமிழும் இணைகிறது என்று சொன்னால் தான் அது காசி தமிழ் சங்கமம் என்று சொன்னார்கள்.

ராமேசுவரம்

அப்துல் கலாமை தந்த மண்ணில் இந்த விழாவை கொண்டாடுவது நம் அனைவருக்குமே பெருமை. ராமேசுவரம் மண்ணில் இந்த இரண்டு ஒளி விளக்குகள் காசியும், தமிழும் சங்கமிக்கும் விழாவாக இது நடைபெறுகிறது. தமிழகத்தின் வீதியில் இருந்து தேசியத்தை பற்றி யோசித்து பாடியவர் பாரதியார். எத்தனை மொழிகளை நாம் பேசிநாலும் தர்மத்தின் பிரகாரம் நாம் வாழ வேண்டும் என்கிற உயர்த தத்துவம் தான் இன்று இந்திய தேசத்தை ஒருங்கிணைந்த தேசியமாக மாற்றி இருக்கிறது. காசியும், ராமேசுவரமும் யாராலும் பிரிக்க முடியாத புனித நகரங்கள். உலகில் பாரதம் உச்சம் தொடும்போது, பாரதத்தில் தமிழகம் உச்ச நிலையை தொட வேண்டும். வளமான தமிழகம், வளமான இந்தியா. பாரதத்தை எந்த தீய சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது." என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+