சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"தலையை வெட்டி தொங்கவிட்டுடுவோம்".. முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு கொலை மிரட்டல்

Google Oneindia Tamil News

சென்னை: முன்னாள் அமைச்சர் சி வி சண்முகத்திற்கு வாட்ஸ் ஆப் மூலமாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    cv Shanmugam ஆவேசம் | அந்த பதவியெல்லாம் காலாவதி ஆகிவிட்டது

    அதிமுகவில் முன்னாள் சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் சி வி சண்முகம். விழுப்புரம் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். அது மட்டுமல்லாமல் ராஜ்யசபா எம்பியாக உள்ளார்.

    ஜெயலலிதா மறைந்த பிறகு சசிகலா பக்கம் இருந்த சிவி சண்முகம் தற்போது சசிகலாவுக்கு எதிரான நிலைப்பாட்டுடன் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர ஆதரவாளராக உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறார்.

    கூடாரம் காலி.. எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும்.. அதிமுகவை சீண்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூடாரம் காலி.. எதிர்க்கட்சியே இல்லாத நிலை உருவாகும்.. அதிமுகவை சீண்டிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    23 தீர்மானங்கள்

    23 தீர்மானங்கள்

    கடந்த அதிமுக பொதுக் குழு கூட்டத்தில் கூட 23 தீர்மானங்களையும் பொதுக் குழு நிராகரிப்பதாக கூறி ஆவேசமாக பேசியிருந்தார். மேலும் நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த போது, தீர்மானங்களை பொதுக் குழு நிராகரித்துவிட்டதால் அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோரின் பதவிகள் காலாவதியாகிவிட்டன.

    11 ஆம் தேதி பொதுக் குழு

    11 ஆம் தேதி பொதுக் குழு

    வரும் ஜூலை 11 ஆம் தேதி பொதுக் குழு கூடும். அப்போது அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்வோம் என்றார். இந்த நிலையில் தமிழக டிஜிபி அலுவலகத்திற்கு சிவி சண்முகத்தின் வழக்கறிஞர் பாலமுருகன் டிஜிபி அலுவலகத்திற்கு வருகை தந்து ஒரு புகார் அளித்தார். அதில் தனது கிளைண்ட் சிவி சண்முகத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுகிறது.

    செல்போனுக்கு கொலை மிரட்டல்

    செல்போனுக்கு கொலை மிரட்டல்

    அவரது செல்போன் எண்ணிற்கு வாட்ஸ் ஆப் மூலமாக மர்ம நபர்கள் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் அளித்துள்ளார். மேலும் கடந்த மே மாதமும் இது போன்றதொரு புகார் எழுந்தது. இதுகுறித்து போலீஸில் புகார் அளித்துள்ளோம் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

    தலையை வெட்டிவிடுவோம்

    தலையை வெட்டிவிடுவோம்

    தலையை வெட்டி தொங்கவிடுவோம் என மர்ம நபர்கள் மிரட்டியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒற்றைத் தலைமை குறித்து சிவி சண்முகம் தீவிரமாக இருந்து வரும் நிலையில் அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Former Minister C Ve Shanmugam gets death threat from unknown assailants and he gave complaint in DGP office.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X