உதயநிதி இளம் பெரியாரா? பெரியாரை அவமானப்படுத்திட்டீங்களே! கொந்தளித்த நாஞ்சில் சம்பத்
சென்னை: உதயநிதி ஸ்டாலினை இளம் பெரியார் என கூறி பெரியாரையே திமுக அவமானப்படுத்திவிட்டதாக தவெகவின் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், திமுகவில் கூடும் இளைஞர்களின் கூட்டம் ரூ 1000 பணத்திற்காக வந்தவர்கள். தவெகவில் இருக்கும் இளைஞர்கள் விஜய்க்காக உயிரை தர தயாராக உள்ளனர்.

உதயநிதியை இளம் பெரியார் என திமுகவினர் கூறியதன் மூலம் பெரியாரை அவர்கள் அவமானப்படுத்திவிட்டனர். அதிமுகவில் இருக்கும் பாதி பேர் தவெகவுக்கு வந்துவிடுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் நடந்த திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என தொடர்ந்து 4ஆவது தலைமுறையாக திராவிட மாடல் நாயகர், முதல்வர் ஸ்டாலின் விளங்கி வருகிறார்.
திராவிட இயக்கத்தை அடுத்த 50 ஆண்டு காலம் நகர்த்திச் செல்ல இருக்கிறவர் நம் 5ஆவது தலைமுறையான உதயநிதி ஸ்டாலின். எல்லாரும் பிறந்தநாளுக்கு வெள்ளை நிற ஆடை, புத்தாடை, கலர் ஆடைகளை அணிவார்கள்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது பிறந்தநாளன்று கருப்பு உடை அணிந்திருந்தார். நாங்க எல்லாரும் பூரித்து போனோம். அப்படிப்பட்ட 'இளம் பெரியார்' உதயநிதியை தந்ததற்காக, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி.
வருகிற சட்டசபைத் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் பேசினார். உதயநிதியை இளம் பெரியார் என குறிப்பிட்டதற்குத்தான் நாஞ்சில் சம்பத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாஞ்சில் சம்பத், திமுகவில் இருந்தார். பின்னர் அங்கிருந்து வெளியேறி வைகோ மதிமுக தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். அங்கும் அவருடன் கருத்து மோதல் ஏற்பட்டதால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
அப்போது நாஞ்சில் சம்பத்துக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியை கொடுத்த ஜெயலலிதா, தமிழகத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இன்னோவா காரையும் கொடுத்தார்.
பின்னர் ஜெயலலிதா மறைந்ததும் டிடிவி தினகரன் ஆதரவாளராக இருந்தார். அவர் அமமுக தொடங்கியதும் கட்சியின் பெயரில் திராவிடமும் இல்லை, அண்ணாவும் இல்லை என கூறிய சம்பத், அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.
எனினும் அவர் திமுக ஆதரவு நிலைப்பாட்டை கொண்டிருந்தார். திமுக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். இந்த நிலையில் திமுகவினர், தன்னை காது கொடுத்து கேட்க முடியாத வார்த்தைகளால் வசைபாடுவதாக கூறி தவெகவில் இணைந்தார்.
மேலும் திமுகவில் ஒரு சைக்கிள் கூட கிடைக்காது என்றெல்லாம் கூறியிருந்தார். இதனால் நாஞ்சில் சம்பத்தை திமுகவினர் விமர்சித்தனர். அதிமுகவில் இன்னோவா காரை வாங்கிவிட்டு, திமுகவில் லட்சக்கணக்கான பணத்தை ஊதியமாக பெற்றுக் கொண்டு தற்போது கட்சி மாறிவிட்டார் என விமர்சித்திருந்தனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications