மறக்கவே முடியாது.. அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறிய கருணாநிதி.. நினைவுகளை பகிர்ந்த பிடிஆர்
சென்னை: ‛‛அப்பாவின் இடத்துக்கு வர வேண்டும் எனக்கூறி கருணாநிதி பேசியதை மறக்கவே முடியாது'' என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் நிதி அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளார். திமுகவின் ஐடி விங்க் சார்பில் செப்டம்பரை திராவிட மாதம் என கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் திராவிட மாத கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக இன்று இரவு திராவிட பொருளாதாரம் என்ற நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அமைச்சர் பிடிஆர் பங்கேற்பு
திமுகவின் ஐடி விங்க் சார்பில் டுவிட்டர் ஸ்பேஜில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசினார். அப்போது திமுக அரசின் திட்டங்கள் பற்றியும், செயல்பாடு குறித்தும் அவர் விளக்கி பேசினார். மேலும் தமிழக பொருளாதார நிலவரம் பற்றியும் கூறினார். அதோடு பொதுமக்கள் சார்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார்.

கருணாநிதியுடனான உறவு
இந்த வேளையில் கபிலக்குமார் என்பவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனிடம் ஒரு கேள்வி கேட்டார். தலைவர் கருணாநிதியுடன் உடனான உறவு பற்றி நினைவு கூற முடியுமா என அவர் கேட்ட கேள்விக்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜ் பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது: எனக்கு தலைவருடன் (கருணாநிதி) அதிககாலம் நெருங்கி பழகும் வாய்ப்பு அமையவில்லை. நான் வெளிநாட்டில் இருந்ததால் இது நடைபெறவில்லை.

மிகச்சிறந்த மனிதர்
எனக்கு 6 வயதா? 5 வயதா? என தெரியவில்லை. தலைவருடன் எடுத்து கொண்ட போட்டோ என்னிடம் உள்ளது. கலைஞர், நாவலருடன் சேர்ந்து இருக்கும் போட்டோ இன்னும் உள்ளது. இது நினைவுக்குரியது. தலைவர் மிகச்சிறந்த மனிதர். தனிப்பட்ட முறையில் அவருடன் உடனான சந்திப்பு என்பது 2006ல் நடந்தது. அப்பா தவறியபோது அப்பாவின் இடத்துக்கு வரும்படி பேசினார். அப்போது முதல் தலைவருடன் தொடர் பழக்கம் ஏற்பட்டது. இது மறக்க முடியாதது.

நிறைய பேரை பார்த்தது இல்லை
தலைவருக்கு நேரம் இல்லாமல் இருந்தாலும் கூட அனைவரிடமும் பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார். அனைவரிடமும் அவர் நல்ல உறவில் இருந்தார். தனிப்பட்ட பாசம் வைத்திருந்தார். கோபப்பட்டாலும் அதனை உடனே மறப்பதை கொண்டவர் தான் தலைவர். ஒருவர் கூறும் விஷயத்தை நன்றாக கேட்கும் திறன் கொண்டவராக இருந்தார். இத்தகைய குணாதிசயங்களோடு நான் நிறையபேரை பார்த்தது இல்லை. தலைவர் என் கையை பிடித்து சிரிச்சி பேசிய போட்டோவை நினைவாக ப்ரொபைலாக வைத்துள்ளேன்'' என கூறினார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications