'இதெல்லாம் ரொம்ப தப்பு..' அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை ஏற்க முடியாது.. ஜெயக்குமார் தாக்கு
சென்னை: சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது என்று விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்றும் கட்சி நலனுக்காக சசிகலா பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிரத் தடையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று மதுசூதனனை நலம் விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

மதுசூதனன் உடல்நிலை
சரியாக அதேநேரத்தில் சசிகலாவும் மதுசூதனனிடம் நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக மதுசூதனனிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வெளியே காரில் சசிகலா இருந்தார். இருப்பினும், அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே, சசிகலா உள்ளே சென்று நலம் விசாரித்தார்.

ஏற்க முடியாது
அதிலும் குறிப்பாக சசிகலா மருத்துவமனைக்கு வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது. அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைச் சந்திக்கச் சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை..

வி.என் ஜானகி
முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ, அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாகத் தடையாக இருக்கக் கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.

உதயநிதி படம்
தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் படத்தைச் சட்டசபையில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.
Recommended Video

நீட் தேர்வு
நீட் தேர்வு குறித்த திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக மக்களையும் மாணவர்களையும் திசை திருப்பும் வகையிலும் ஏமாற்றும் விதமாகப் பேசி வருகிறது. தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்று பேச்சை மாற்றிப் பேசுகிறார்கள். 2010ம் ஆண்டு திமுக அரசு மத்திய அரசாக இருந்த காங்கிரசின் முழு ஆதரவோடு நீட் தேர்வைக் கொண்டு வரக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மாற்றுப்பட்ட கருத்தைப் பேசி வருகிறார்கள்..

7.5% இட ஒதுக்கீடு
நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறான ஒன்று. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு" என்று அவர் தெரிவித்தார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications