Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'இதெல்லாம் ரொம்ப தப்பு..' அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்துவதை ஏற்க முடியாது.. ஜெயக்குமார் தாக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சசிகலா அதிமுக கொடி கட்டி காரில் செல்வதை ஏற்க முடியாது என்று விமர்சித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை என்றும் கட்சி நலனுக்காக சசிகலா பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டுமே தவிரத் தடையாக இருக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இன்று மதுசூதனனை நலம் விசாரிக்க எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

 மதுசூதனன் உடல்நிலை

மதுசூதனன் உடல்நிலை

சரியாக அதேநேரத்தில் சசிகலாவும் மதுசூதனனிடம் நலம் விசாரிக்க அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்திருந்தார். ஒரே நேரத்தில் இருவரும் மருத்துவமனைக்கு வந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் எடப்பாடி பழனிசாமி அவசர அவசரமாக மதுசூதனனிடம் நலம் விசாரித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தார். அப்போது வெளியே காரில் சசிகலா இருந்தார். இருப்பினும், அவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்கவில்லை. எடப்பாடி பழனிசாமி மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரே, சசிகலா உள்ளே சென்று நலம் விசாரித்தார்.

 ஏற்க முடியாது

ஏற்க முடியாது

அதிலும் குறிப்பாக சசிகலா மருத்துவமனைக்கு வந்த காரில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், "சசிகலா அதிமுக கொடி கட்டிய காரில் செல்வதை ஏற்க முடியாது. அதிமுகவோடு எந்த உரிமையும் இல்லாத அவர் கொடி கட்டுவது தேவையற்ற நடவடிக்கை. சசிகலா அப்பல்லோ மருத்துவமனைக்குச் சென்று அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனைச் சந்திக்கச் சென்றதை அதிமுக விமர்சிக்க விரும்பவில்லை..

 வி.என் ஜானகி

வி.என் ஜானகி

முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மனைவி வி.என் ஜானகி பெருந்தன்மையோடு அதிமுக இணைப்பிற்காக எவ்வாறு கட்சியை ஜெயலலிதா தலைமையேற்க விட்டுக்கொடுத்தாரோ, அதே போன்று சசிகலாவும் பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்க வேண்டும் மாறாகத் தடையாக இருக்கக் கூடாது" என்று அவர் குறிப்பிட்டார்.

 உதயநிதி படம்

உதயநிதி படம்

தொடர்ந்து பேசிய அவர், "உதயநிதி ஸ்டாலின் படத்தைச் சட்டசபையில் சட்ட அமைச்சர் தனது அறையில் மாட்டியது விதிமீறலாகும். சட்ட அமைச்சர் தன் பூஜை அறையில் வேண்டுமானால் உதயநிதி படத்தை வைத்து பூஜை செய்யட்டும். அதை நாங்கள் எதிர்க்கவில்லை.

Recommended Video

    Sasikala-வோடு சமாதானமாக EPS போயிருந்தால்.. Pugalenthi Latest Speech | Oneindia Tamil
     நீட் தேர்வு

    நீட் தேர்வு

    நீட் தேர்வு குறித்த திமுக அரசு முன்னுக்குப் பின் முரணாக மக்களையும் மாணவர்களையும் திசை திருப்பும் வகையிலும் ஏமாற்றும் விதமாகப் பேசி வருகிறது. தேர்தலுக்கு முன்னும் பின்னும் என்று பேச்சை மாற்றிப் பேசுகிறார்கள். 2010ம் ஆண்டு திமுக அரசு மத்திய அரசாக இருந்த காங்கிரசின் முழு ஆதரவோடு நீட் தேர்வைக் கொண்டு வரக் காரணமாக இருந்துவிட்டு, தற்போது மாற்றுப்பட்ட கருத்தைப் பேசி வருகிறார்கள்..

     7.5% இட ஒதுக்கீடு

    7.5% இட ஒதுக்கீடு

    நீட் தேர்வு உண்டா இல்லையா என்பதை திமுக தெரிவிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் கூறுவது உண்மைக்கு மாறான ஒன்று. கிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாநகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் இருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவிடும் வகையில் 7.5 இட ஒதுக்கீடு கொண்டு வந்தது அதிமுக அரசு" என்று அவர் தெரிவித்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+