வெளியானது பிளஸ்-1 தேர்வு முடிவுகள்.. பாஸ் ஆகாதவர்கள் +2 போக முடியுமா? அதிகாரிகள் சொன்ன விளக்கம்..!
சென்னை : பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியிருக்கும் நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் +1 தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் +2 வகுப்புக்குச் செல்லலாமா? என்பது குறித்தும் கல்வித்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
2023- 2024 கல்வி ஆண்டுக்கான மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கிறது மொத்தம் 8 லட்சத்து 1172 மாணவர்கள் தேர்வு எழுதினர்.

தேர்வெழுதிய மாணவ மாணவிகள் www.tnresult.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
4,26,821 மாணவிகளும், 3 லட்சத்து 84 ஆயிரத்து 351 மாணவர்களும் தேர்வு எழுதிய நிலையில், 7,39,539 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 91.17 சதவீதம் தேர்ச்சி கிடைத்துள்ளது. மாணவர்களை விட மாணவியர்கள் 7.43 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பாடப்பிரிவு வாரியான தேர்ச்சி சதவீதத்தில் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் முன்னிலையில் இருக்கின்றனர். அந்த வகையில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். வணிகவியல் பாடப்பிரிவில் 86.93% மாணவர்களும், கலை பிரிவுகளில் 72.89% மாணவர்களும், தொழில்பாட பிரிவுகளில் 78.72 சதவீத மாணவர்களும் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
கடந்த 2023-ம் ஆண்டு பிளஸ்-1 தேர்வில் 90.93 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்த ஆண்டு அதை விட 0.24 சதவீதம் பேர் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முன்னதாக பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று காலை சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள அரசு தேர்வுகள் இயக்கக அலுவலகத்தில் தேர்வு முடிவுகளை அரசு தேர்வுகள் இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டார். அப்போது பேசிய அவர், பிளஸ்-1 தேர்வு முடிவுகளின் 91.17 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் எனவும், 11ம் வகுப்பில் மாணவர்கள் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பில் தொடரலாம் என கூறினார்.
-
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னை மொத்தமாக முடங்கியது.. சிலிண்டர் இல்லாமல் அடுத்தடுத்து மூடப்படும் உணவகங்கள். தவிக்கும் மக்கள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி! -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
சென்னையில் புதிய அமெரிக்கத் துணைத் தூதராக மரியானா எல்.நெய்ஷுலர் பொறுப்பேற்பு -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications