தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா? இப்படியும் சில வழிகள் இருக்கு.. உஷார்
சென்னை: காணாமல் போனவரின் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெற முடியுமா? பட்டா பெற முடியும் என்பதே பதில். ஆனால் அதற்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
பொதுவாக அரசு பயன்படுத்தாத புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு நிலத்தை (அரசின் நிலத்தை) ஆக்கிரமித்து குடியோருப்போருக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்கிற பட்சத்தில் அரசு அவர்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் கழித்து பட்டா வழங்கும். ஆனால் காணாமல் போனவரின் நிலத்தையும் சில நேரங்களில் மக்கள் ஆக்கிரமிக்கிறார்கள்.

பல ஆண்டுகளாக ஒரு நிலத்தை யாரும் உரிமை கோராத நிலையில், அதை புறம்போக்கு நிலமாக கருதி மக்கள் ஆக்கிரமிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன. அப்படி ஆக்கிரமித்தவர்கள் பட்டாவை பெறுகிறார்கள். ஆனால் அதற்கு கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. ஏனெனில் அரசு துறை நிலத்தை போல் தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா பெறுவது என்பது எளிதான காரியமல்ல. ஆனாலும் முடியும் என்பதே உண்மை.
சரி ஒருவர் எப்படி தனியார் நிலத்தை ஆக்கிரமித்து பட்டா வாங்குகிறார் என்பதை பார்ப்போம். தனியார் பெயரில் பட்டா வழங்கப்பட்ட நிலத்தை அவர் தலையீடு இன்றி, வேறு ஒருவர் தொடர்ந்து 14 ஆண்டுகள் அந்த நிலத்தை எந்தவித வாடகையும செலுத்தாமல் பயன்படுத்தி வந்ததற்காக ஆதாரத்தை சமர்பிக்க வேண்டும். அத்துடன் அந்த நிலத்துக்கான வரிகளை ஆக்கிரமித்தவர்கள் செலுத்தி இருந்தால், அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.
அப்படி தாக்கல் செய்த ஆவணங்களின் அடிப்படையில் பட்டா வழங்க வேண்டிய வருவாய்துறையினர், முதலில் வருவாய் ஆவணங்களின் அடிப்படையில் உண்மையான உரிமையாளரை கண்டுபிடித்து அவருக்கு நோட்டீஸ் அனுப்புவார்கள். அதாவது இன்னார் உங்களின் நிலத்திற்கு பட்டா கேட்கிறார், கொடுக்கலாமா என்று நோட்டீஸ் அனுப்புவார்கள். அதற்கு பதில் அளிக்காமல், எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல் உரிமையாளர் இருந்தால், ஆக்கிரமிப்பாளர் பெயருக்கு பட்டா வழங்கப்படும்.
அதேநேரம் உண்மையான உரிமையாளர் காணாமல் போய்விட்டார். எங்கு இருக்கிறார். எப்படி இருக்கிறார் என்று தெரியாத நிலையை ஆக்கிரமிப்பாளர் தகுந்த ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். அதேநேரம் உண்மையான உரிமையாளருக்கு சட்ட ரீதியாக நிலத்தை காப்பாற்றிக்கொள்ள அனைத்து வாய்ப்புகளும் வழங்கப்படும். ஆனால் வாய்ப்புகளை தவறவிட்டால் ஆக்கிரமிப்பாளர் பட்டாவினை பெற்றுவிடுவார். நீதிமன்ற ஆணைகள் மூலமாகவும் ஒருவர் காணாமல் போய்விட்டார் என்பதை நிரூபித்து பட்டா பெற முடியும் என்பதால் நிச்சயம் வீட்டு மனை வைத்திருப்போர் கவனமாக இருக்க வேண்டும்.
எனவே உங்கள் நிலத்தை முறையாக பராமரித்து வாருங்கள். யாராவது ஆக்கிரமிக்கிறார்களா என்பதை அறிய மாதம் அல்லது 3 மாதத்திற்கு ஒருமுறையாவது உங்கள் நிலத்தை போய் பார்கக வேண்டும். உங்கள் இடத்தை சுற்றி வேலிகளை கண்டிப்பாக போடுங்கள். உங்கள் பத்திரங்களின் நகலை யாரிடமும் கொடுக்காதீர்கள். அதை வைத்து போலி பத்திரங்களை தயாரிக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் பெயரில் பத்திரம் இருந்து பட்டா இல்லை என்றால், உடனே பட்டா மாற்றம் செய்யுங்கள்.பட்டா மாற்றம் செய்யாவிட்டால் சிக்கல் ஆகிவிடும்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications