Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியவில்லை.. திமுக பவள விழாவில் ஸ்டாலின் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியாத நிலை உள்ளது என்று மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து பேசினார். மேலும் தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.

சென்னை ஒஎம்சிஏ மைதானத்தில் இன்று திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- கழகம் நல்ல கழகம் என்ற பாடலுடன் முதல்வர் ஸ்டாலின் உரையை தொடங்கினார். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன்.

dmk mk stalin chennai

பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. திமுகவின் பவள விழா எனது தலைமையில் கொண்டாடப்படுவது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள். அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்றதைவிட வென்றோம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளுடன் பல வேலைவாய்ப்புகளை பெற்று வந்துள்ளேன்.

கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம். பணிக்கு செல்லக்கூடிய மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது.

இப்படி ஒவ்வொரு தனி மனிதரையும் சார்ந்திருக்கிற அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. இத்தனை திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா?.. இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வளம் மிக்க மாநிலமாக மேம்படுத்தி வருகிறது. பலப்படுத்தி வருகிறது.

நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால் இல்லை. மாநில உரிமைகள் நிறைவேறிட ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் கூட தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக முன்னேற்றியிருக்கிறோம். இன்னும் சரியான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மேலும் முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும்.

கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.

குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆணவத்தில் சொல்லவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+