கிரீம் பன்னுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியவில்லை.. திமுக பவள விழாவில் ஸ்டாலின் அட்டாக்!
சென்னை: திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின், கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என கேட்க கூட முடியாத நிலை உள்ளது என்று மத்திய அரசை மறைமுகமாக விமர்சித்து பேசினார். மேலும் தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன் என்று ஸ்டாலின் பேசினார்.
சென்னை ஒஎம்சிஏ மைதானத்தில் இன்று திமுக முப்பெரும் விழா நடந்தது. இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது:- கழகம் நல்ல கழகம் என்ற பாடலுடன் முதல்வர் ஸ்டாலின் உரையை தொடங்கினார். தொண்டர்கள் இல்லாமல் திமுக இல்லை, தொண்டர்கள் இல்லாமல் நான் இல்லை. தன்னை வாழ வைத்துக்கொண்டிருக்கும் தொண்டர்கள், நிர்வாகிகளை வணங்குகிறேன்.

பவள விழா, முப்பெரும் விழா எழுச்சிமிகு மாநாடு போல் நடைபெற்று வருகிறது. திமுகவின் பவள விழா எனது தலைமையில் கொண்டாடப்படுவது எனக்கு பெருமையாக உள்ளது. தமிழ்நாடும் திமுகவும் எனது இரு கண்கள். அமெரிக்க பயணத்திற்கு சென்றோம் என்றதைவிட வென்றோம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பல்லாயிரக்கணக்கான கோடி முதலீடுகளுடன் பல வேலைவாய்ப்புகளை பெற்று வந்துள்ளேன்.
கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் எத்தனையோ சாதனைகளை செய்துள்ளோம். மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை. உயர் கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய். பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுத் திட்டம். பணிக்கு செல்லக்கூடிய மகளிருக்கு கட்டணமில்லா பஸ் சேவை வழங்கப்படுகிறது.
இப்படி ஒவ்வொரு தனி மனிதரையும் சார்ந்திருக்கிற அரசாக திராவிட மாடல் அரசு இருந்து வருகிறது. இத்தனை திட்டங்கள் வேறு எந்த மாநிலத்திலாவது இருக்கிறதா?.. இல்லை என்று சொல்லக்கூடிய வகையில் தான் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து வளம் மிக்க மாநிலமாக மேம்படுத்தி வருகிறது. பலப்படுத்தி வருகிறது.
நம்முடைய எல்லா கனவுகளும் நிறைவேறிவிட்டதா என்று கேட்டால் இல்லை. மாநில உரிமைகள் நிறைவேறிட ஒரு ஒன்றிய அரசு அமையவில்லை. நிதி உதவி உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு இன்னமும் நாம் போராட வேண்டிய நிலையில் தான் இருக்கிறோம். இப்படிப்பட்ட நெருக்கடியான நிலையில் கூட தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக முன்னேற்றியிருக்கிறோம். இன்னும் சரியான நிதி கிடைத்தால் தமிழ்நாட்டை மேலும் முன்னோடி மாநிலமாக மாற்ற முடியும்.
கலைஞர் எளிமையாக சொன்னார், நம்ம கோட்டையில் இருந்தாலும் அங்கு இருக்ககூடிய புல்லை வெட்ட வேண்டும் என்றால் கூட நமக்கு உரிமை இல்லை. மேலே அனுமதி வாங்க வேண்டும். இன்றைக்கு கிரீம் பண்ணுக்கு எவ்வளவு வரி? என்று கேட்க கூட உரிமை இல்லாத நிலை உருவாகியிருக்கு.
குறைவான நிதி கிடைக்கும் போதே இவ்வளவு செய்ய முடியும் என்கிற போது முழுமையாக கிடைத்தால் மேலும் தமிழ்நாட்டின் நிலையை மாற்ற முடியும். வரும் 2026 தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெறுவதே நமது இலக்காக இருக்க வேண்டும். ஆணவத்தில் சொல்லவில்லை. அடுத்து வரும் தேர்தல்களிலும் திமுகவே வெற்றி பெறும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
-
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
170ஐ தாண்டி.. சிக்ஸர் அடிக்கும்.. திமுகதான் மீண்டும்.. அப்போ தவெக, அதிமுக? 3 சர்வே ரிப்போர்ட்ஸ்! -
திமுக கூட்டணிக்கு 172 முதல் 178 இடங்கள்.. அதிமுக சறுக்கல்.. அப்போ தவெக.. வெளியான பரபர சர்வே! -
வில்லிவாக்கம் தொகுதி திமுக பொறுப்பாளர்கள் கூட்டத்தில், மனைவியுடன் பங்கேற்ற ஸ்டாலின் மருமகன் சபரீசன் -
அதிமுக கோட்டையில் ஓட்டை போடும் திமுக.. கொங்கு மண்டலத்தில் மாறும் களம்! Poll Tracker கருத்துக்கணிப்பு -
கோவை தெற்கு மட்டுமல்ல 10 தொகுதிகளிலும் இறங்கியடிக்க போகும் செந்தில் பாலாஜி.. அதிமுக பாஜக ஷாக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
உசிலம்பட்டி ஐயப்பன் சசிகலா கட்சியில் இணைந்தார்.. அதே தொகுதியில் வேட்பாளராக அறிவிப்பு! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
"செந்தில் பாலாஜி கோவையில் போட்டியிட காரணம் இதுதான்" - பிரச்சாரத்தில் ஓப்பனாக சொன்ன முதல்வர் ஸ்டாலின் -
“என் மகன் பிரச்சாரம் செய்துதான் நான் வெற்றி பெறவேண்டும் என்ற அவசியமில்லை” - கருணாஸ் பேட்டி -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications