சென்னை வியாசர்பாடியில் தறிகெட்டு ஓடி கவிழ்ந்த கார்! லைசன்ஸ் இன்றி ஓட்டிய 18 வயது இளைஞரிடம் விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை வியாசர்பாடியில் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இளைஞர் ஒருவர் ஓட்டி வந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பேசின் பிரிட்ஜ் நோக்கி சென்று கொண்டிருந்த சொகுசு கார் வியாசர்பாடி பேஷன் பிரிட்ஜ், மேம்பாலம் முடியும் இடத்தில் திடீரென தனது கட்டுப்பாட்டை இழந்து தலைக்குப்புற கவிழ்ந்தது.

accident

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக வாகன ஓட்டிகள் புளியந்தோப்பு காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் காருக்குள் இருந்த 5 பேர் காயங்களுடன் மீட்டனர். மேலும் கவிழ்ந்து கிடந்த காரையும் ஜேசிபி வைத்து மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.

போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணையில் ஓட்டுநர் உரிமை இல்லாமல் 18 வயது நிரம்பிய இளைஞர் காரை ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+