Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உயிரிழந்தவரின் பெயரில் மோசடி.. சென்னை துணை மேயர் உள்பட 6 பேர் மீது பாய்ந்த வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் உயிரிழந்தவரின் பெயரில இருந்த பங்கை, உயிருடன் இருப்பதுபோல் சித்தரித்து மோசடியாக செய்து பறிக்க முயன்றதாக, சென்னை துணை மேயர் மகேஷ் உள்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேற்கு தாம்பரம் ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் மோகன். இவரது மனைவி இசக்கியம்மாள். மோகன் சைதாப்பேட்டையில் உள்ள மார்ஸ் மைன்ஸ் என்ற நிறுவனத்தை , சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகியோருடன் இணைந்து நடத்தி வந்தார்

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மோகன் இறந்து போனார். மோகன் இறந்துபோனாதால் அவரது பங்கை மனைவி இசக்கியம்மாள், பங்குதார்களான சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன், திவாகரன் ஆகியோரிடம் கேட்டு முறையிட்டாராம். ஆனால், மோகனுக்கு உரிய பங்கை அவரது மனைவியிடம் தராமல் அலைக்கழித்து வந்தார்களாம்.

இந்நிலையில் ஒருநாள், தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்திலிருந்து இசக்கியம்மாளுக்கு ஒரு எஸ்எம்எஸ் வந்துள்ளது. அதில், இறந்த மோகன் உயிருடன் இருப்பதுபோலவும், போலியாக சித்தரித்து கையெழுத்திட்டு பங்கை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் இசக்கியம்மாளுக்கு தெரியவந்ததாம்.

இது தொடர்பாக இசக்கியம்மாள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, தென்சென்னை மாவட்ட பதிவாளர் சத்யபிரியாவிடம் விசாரித்தாராம்.

அப்போது துணை மேயர் மகேஷ் உள்பட ஐந்து பேர் போலியான ஆவணங்களை சித்தரித்து அவரது பங்கை மோசடி செய்ய முயன்றது அவருக்கு தெரியவந்ததாம்.

இதனையடுத்து இந்த மோசடி சம்பவம் தொடர்பாக, இசக்கியம்மாள் மாநகராட்சி துணை மேயர் மகேஷ், குணசேகரன், பதிவாளர் சத்யபிரியா உள்பட 6 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2021ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் கொடுத்தார்.

ஆனால் அந்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இசக்கியம்மாள் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மோசடி, போலியான ஆவணத்தை புனைதல் உள்பட ஆறு பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Case filed against deputy Mayor of Chennai for trying to steal the deceaseds property

சென்னை மாநகராட்சி துணை மேயர்மற்றும் அமைச்சர் பெரிய கருப்பனின் மருமகன் உள்ளிட்டோர் இணைந்து போலியான ஆவணங்களுடன் மோசடி செய்ய முயன்றதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரத்தில் சென்னை துணை மேயர் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+