அடுத்த குறி திமுக எம்பிகள்? ஆ ராசா, தயாநிதி மாறன் மீது.. மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு
சென்னை: தேர்தல் பிரசாரத்தின் போது பெண்களை அவமதிக்கும் விதமாகப் பேசியதாக திமுக எம்பிகள் ஆ ராசா, தயாநிதி மாறன் மற்றும் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சியினரும் தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த வாரம் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் ஆ ராசா பிரசாரம் செய்ய 28 மணி நேரம் தடை விதித்துத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. தடை முடிந்து இன்று மாலை ஆ ராசா மீண்டும் பிரசாரம் செய்யத் தொடங்கினார்.
முன்னதாக கடந்த 29ஆம் தேதி சென்னையில் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் அதிமுக பெண்கள் வழக்கறிஞர் பிரிவு தலைவி புகார் ஒன்றை அளித்திருந்தார். பிரசாரத்தின் போது திமுகவினர் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசுவதால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த புகாரின் அடிப்படையில் திமுக எம்பிகள் ஆ.ராசா, தயாநிதி மாறன் மற்றும் பட்டிமன்றப் பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி ஆகியோர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது ஆபாசமாகத் திட்டுதல், கலகம் செய்ய தூண்டி விடுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications