Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லஞ்சம் வாங்கி மாட்டினாரே அங்கித் திவாரி.. அமலாக்கத்துறையும் விசாரிக்கனுமாம்! இன்று வழக்கு விசாரணை

Subscribe to Oneindia Tamil

சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.

மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ் பாபுவை மிரட்டி 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டாா். ஊழல், லஞ்சம், முறைகேடுகளை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Case hearing regarding ED petition filed seeking permission to interrogate arrested Ankit Tiwari

அவரிடம் தமிழ்நாடு மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் அவர் ஆஜா்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.

ஆனால், இதற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா, "உரிய ஆதாரங்களுடன் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கித் திவாரியிடம் விசாரணை செய்தால் மட்டுமே மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இருக்கும் தொடர்பு தெரிய வரும். அவரது லேப்டாப்பில் இருந்து முக்கிய ஆவணம் கிடைத்து உள்ளது. 75 பேரை அவர் இதுவரை பட்டியலிட்டு உள்ளார். மேலும் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படவில்லை. அங்கித் திவாரிக்கு ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்." என்றார்.

அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளையுடன் அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்க கோரி அமலாக்கத் துறை, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மோகனா, மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தாா்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+