லஞ்சம் வாங்கி மாட்டினாரே அங்கித் திவாரி.. அமலாக்கத்துறையும் விசாரிக்கனுமாம்! இன்று வழக்கு விசாரணை
சென்னை: லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்த அனுமதி கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா் சுரேஷ் பாபுவை மிரட்டி 2 தவணையாக ரூ.40 லட்சம் லஞ்சம் பெற்றதாக கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒன்றாம் தேதி போலீசாரால் மடக்கிப்பிடித்து கைது செய்யப்பட்டாா். ஊழல், லஞ்சம், முறைகேடுகளை தடுக்க வேண்டிய அமலாக்கத்துறை அதிகாரியே லஞ்சம் வாங்கி கைதான விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அவரிடம் தமிழ்நாடு மாநில ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு திண்டுக்கல் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றத்தில் அவர் ஆஜா்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்றக் காவல் 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே அங்கித் திவாரி திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
ஆனால், இதற்கு தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னா, "உரிய ஆதாரங்களுடன் அங்கித் திவாரி கைது செய்யப்பட்டு உள்ளார். அங்கித் திவாரியிடம் விசாரணை செய்தால் மட்டுமே மேலும் பல அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் இருக்கும் தொடர்பு தெரிய வரும். அவரது லேப்டாப்பில் இருந்து முக்கிய ஆவணம் கிடைத்து உள்ளது. 75 பேரை அவர் இதுவரை பட்டியலிட்டு உள்ளார். மேலும் 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்படவில்லை. அங்கித் திவாரிக்கு ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும். அமலாக்கத் துறை அதிகாரிகள் அவரை பாதுகாக்க முயற்சி செய்கின்றனர்." என்றார்.
அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நாளையுடன் அங்கித் திவாரியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அவரிடம் விசாரணை மேற்கொள்ள அனுமதியளிக்க கோரி அமலாக்கத் துறை, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நேற்று ஒத்திவைக்கப்பட்டது. இதனை தொடா்ந்து, இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மோகனா, மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தாா்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications