காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் சாதி பெயர் இருந்தது தட்டச்சு பிழை - சிங்காநல்லூர் ஸ்ரீநிதி விளக்கம்!
கோவை: சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், கோவை சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பெயர், சாதி பின்னொட்டுடன் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி அது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டசபை தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இவற்றில் 27 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் நேற்று அறிவிக்கப்பட்டனர். கோவையில் காங்கிரஸ் கட்சிக்கு சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம் ஆகிய 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. சிங்காநல்லூர் தொகுதிக்கு தேசிய இளைஞரணி செயலாளர் ஸ்ரீநிதி, கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மாநில இளைஞரணி செயலாளர் சூர்யபிரகாஷ் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

வேட்பாளர் பட்டியலிலேயே ஶ்ரீநிதி நாயுடு என்று சாதி பெயருடன் அவர் பெயர் அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் ஶ்ரீநிதி பெயர் மட்டும் தான் சாதிய அடையாளத்துடன் வெளியானது. இது சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது.
இந்த வேட்பாளர் அறிவிப்பால் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அதிருப்தியடைந்தனர். அந்த இரண்டு வேட்பாளர்களையும் மாற்ற வலியுறுத்தி, கோவை காங்கிரஸ் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த தொண்டர்கள் நேற்று மாலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்ரீநிதி, 2021 சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் உடுமலைப்பேட்டை தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தவர். அதன் பிறகு பாஜக அதிமுக கட்சிகளுக்கு சென்றுவிட்டு 2023 ஆம் ஆண்டில்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அண்ணாமலை ஆதரவாகச் செயல்பட்டவர். அவருக்கு சீட் கொடுத்துள்ளனர் என காங்கிரஸ் கட்சியினர் குமுறினர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் தனது பெயருடன் சாதி பின்னொட்டு இடம்பெற்றது குறித்து விளக்கம் அளித்துள்ளார் ஸ்ரீநிதி. தனது பெயருடன் சாதிய பின்னொட்டு இணைக்கப்பட்டிருந்தது தனக்கே அதிர்ச்சியளித்ததாகவும், அது தட்டச்சு பிழை என்றும் ஸ்ரீநிதி தெரிவித்துள்ளார்.
சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஸ்ரீநிதி வெங்கடேச மோகன். தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்து, மண்ணின் விழுமியங்களை உள்வாங்கியவள். தற்போது சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் பட்டியலில் எனது பெயருடன் சாதிய அடைமொழி இணைக்கப்பட்டதை பார்த்ததும் எனக்கே பெரும் அதிர்ச்சியாக இருந்தது. ஆனால் அது தட்டச்சு பிழையால் (Clerical Error) ஏற்பட்டுவிட்டது.
என்னை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்திய தந்தை பெயரையும், எனக்கு வலிமை சேர்த்த கல்வி தகுதியையும் மட்டுமே என்னுடைய அடையாளமாக கொண்டவள் நான். சாதி-மத பேதமற்ற சமத்துவமே எனது கொள்கை. எனவே தட்டச்சு பிழையை கொண்டு அவதூறு பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். சாதி மதங்களை கடந்து மக்களின் நலனுக்காக என்றும் பணி செய்வதே எனது கடமை!" எனத் தெரிவித்துள்ளார்.
-
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
நேரில் வாங்க அண்ணாமலை.. பாஜக மேலிடம் போட்ட திடீர் உத்தரவு.. சென்னையில் மோடியுடன் முக்கிய மீட்டிங் -
அமர், வினோஜ், சூர்யா.. அண்ணாமலை ஆதரவாளர்களுக்கும் சீட் இல்லை.. பாஜக வேட்பாளர் பட்டியல் சொல்லும் சேதி -
களத்தில் தலைவரை காணோம்.. தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? தவெக தொண்டர்களையே கதறவிடும் விஜய்! -
இவங்க ஜெயிச்சா அவங்கதான் CM.. வேடசந்தூர் டூ ராமநாதபுரம்! இந்த 4 இடத்தை மட்டும் கவனிங்க! ஏன் தெரியுமா -
ஆத்தாடி இம்புட்டு கோடியா? ‘பறிமுதல்’ பணத்தை மீட்பது எப்படி? உரிமை கோராத பணம் என்ன ஆகும்? -
காங்கிரஸ் கட்சியின் தமிழக தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலகியது ஏன்? மாணிக்கம் தாகூர் விளக்கம்! -
விஜய்க்கு ஓட்டு போட மாட்டியா? பெற்றோரின் SIR படிவத்தை வேண்டுமென்றே சமர்பிக்காமல் வைத்த மகன்! -
திருத்தணி தவெக நிர்வாகியின் அலப்பறை.. தனித்து விடப்பட்டதற்கு காரணம் இதுதான்! புலம்பும் நிர்வாகிகள் -
கைவிட்டு போன அவிநாசி.. தவெகவுக்கு தாவிய மகன்! முன்னாள் சபாநாயகர் தனபால் கொடுத்த விளக்கம்! -
தேர்தல் தேதி கூட தெரியலையே.. இவர் தான் தவெக வேட்பாளராம்.. ஒரே அவமானமா போச்சே -
85% ஓவர்.. இன்னும் சில மணி நேரங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல்.. செல்வப்பெருந்தகை அப்டேட்!












Click it and Unblock the Notifications