காவிரி நதிநீர் விவகாரம்- தமிழ்நாடு அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பாஜக இன்று ஆர்ப்பாட்டம்
சென்னை: காவிரி நதிநீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளில் தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.
மணிப்பூர் படுகொலைகளைக் கண்டித்து சென்னையில் இன்று திமுக எம்பி கனிமொழி தலைமையில் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்த உள்ளனர் மேலும் தமிழ்நாடு முழுவதும் நாளையும் திமுக மகளிரணியினர் போராட்டம் நடத்துகின்றனர். ஏற்கனவே தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இடதுசாரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் போராட்டங்களை அறிவித்துள்ளது.

இந்நிலையில் காவிரி நதிநீர் பிரச்சனை, மேகதாது அணை விவகாரம், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஆகியவற்றை முன்வைத்து இன்று தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர். ஒவ்வொரு மாநகராட்சி வார்டுகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications