இனி பிரச்சனை இல்லை.. நாடு முழுக்க ரயில்களில் வருகிறது சிசிடிவி கேமரா! எங்கே பொருத்தப்படும் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரயில் எஞ்சின்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டுனர்களை கண்காணிக்க, எஞ்சின் செயல்பாடுகளை கண்காணிக்க சிசிடிவி பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்தியா முழுக்க ரயில்களில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கூட முதல் 182 ரயில்களின் நேரத்தை மாற்ற இந்திய ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. புறப்படும் நேரம், இடையில் நிற்கும் நேரம், சென்றடையும் நேரம், மொத்த பயண காலம் மாற்றப்படும். புதிய ரயில்களுக்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி தென்னக ரயில்வேயில் பின்வரும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது,

CCTV camera to be installed inside the Indian Train Engines soon

கொல்லம் ஜங்க்சன். சென்னை எழும்பூர்
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்-திருப்பதி
கோவை டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல்
பாண்டிச்சேரி-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
பாண்டிச்சேரி-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- புவனேஸ்வர் எக்ஸ்பிரஸ் (வாரந்தோறும்)
பாண்டிச்சேரி- தாதர் எக்ஸ்பிரஸ் (திரை-வாரம்)
விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- ஹவுரா எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
விழுப்புரம்-திருப்பதி எக்ஸ்பிரஸ் (தினசரி)
செங்கோட்டை-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (தினசரி)
கோயம்புத்தூர்-மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ்
விழுப்புரம்-திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (தினசரி)
பாண்டிச்சேரி- புது டெல்லி எக்ஸ்பிரஸ் (வாராந்திரம்)
எர்ணாகுளம்-காரைக்கால் எக்ஸ்பிரஸ் (தினசரி)
மயிலாடுதுறை- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (தினசரி)
மயிலாடுதுறை- திருச்சிராப்பள்ளி எக்ஸ்பிரஸ்-

மதுரை-புன்னலூர் எக்ஸ்பிரஸ்
புன்னலூர்-மதுரை எக்ஸ்பிரஸ்
டாக்டர் எம்.ஜி.ஆர் சென்னை சென்ட்ரல்- நாகர்கோவில் ஜே.என்
தாதர் - திருநெல்வேலி
தாதர் - திருநெல்வேலி
பாலக்காடு-திருச்செந்தூர்
திருச்செந்தூர்- பாலக்காடு
மதுரை- திருவனந்தபுரம்
கோவை ஜே.என்-மதுரை
மதுரை-கோவை
ஈரோடு-திருநெல்வேலி
காரைக்கால்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (தினசரி)
கோவை ஜே.நிஜாமுதீன்
எர்ணாகுளம்-திருவந்தபுரம்
மங்களூர் - திருவனந்தபுரம்
குருவாயூர்-திருவந்தபுரம்
புனே-கன்னியாகுமரி

மேற்கண்ட ரயில்கள் 10 - 60 நிமிடம் வரை இனி தாமதமாக புறப்படும். நிர்வாக காரணங்கள், வந்தே பாரத் ரயிலை இயக்குவது உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த ரயில்களின் வேகம் குறைக்கப்பட்டு அது புறப்படும், செல்லும் நேரங்கள் மாற்றப்பட்டு உள்ளது.

சிசிடிவி கேமரா: இந்த நிலையில்தான் தற்போது ரயில் எஞ்சின்களில் சிசிடிவி கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி ஓட்டுனர்களை கண்காணிக்க, எஞ்சின் செயல்பாடுகளை கண்காணிக்க சிசிடிவி பொருத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

CCTV camera to be installed inside the Indian Train Engines soon

ஏற்கனவே 500 ரயில்களில் சிசிடிவி கேமரா உள்ளது. இந்த நிலையில் விபத்துகளை தடுக்கும் விதமாக 5000 ரயில்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒடிசாவில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கியது. அங்கே அள்ள அள்ள உடல்களாக வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. இதில் இரண்டு ரயில்களும் நேருக்கு நேர் மோதவில்லை. இதில் 296 பேர் பலியானார்கள்.

அதை தொடர்ந்து சமீபத்தில் ஆந்திர மாநிலம் கண்டகபள்ளி அருகே 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் இந்த கோர சம்பவம் நடந்துள்ளது. பிரேக் பழுது காரணமாக நிறுத்தப்பட்டிருந்த விசாகா- ராயகாடா பயணிகள் ரயில் மீது பலாசா எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதுதான் விபத்திற்கு காரணம். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த நிலையில்தான் விபத்துக்களை தடுக்கும் விதமாக தற்போது இதில் 296 பேர் பலியானார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+