செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் திருப்பம்.. மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி இடமாற்றம்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதி மாற்றப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த அனைத்து பொறுப்புகளும் புதிய துணை ஆணையர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ 1.62 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறிதது சென்னையை சேர்ந்த கணேஷ்குமார் உள்ளிட்டோர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் தனித்தனியாக 3 வழக்குகளை பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு விசாரணையை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனராக இருந்த நாகஜோதி மேற்கொண்டு வந்தார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபு இருந்த போது கூட செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணை குறித்து தலைமைச் செயலகத்தில் கூட்டம் நடந்த போதெல்லாம் நாகஜோதியும் அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தார். சுமார் 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் இந்த வழக்கு விசாரணையை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் செந்தில் பாலாஜிக்கு விடுதலை அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதில் தமிழ்நாடு காவல் துறை விசாரணை நடத்தி 2 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமலாக்கத் துறை விசாரணை நடத்த அனுமதி வழங்கியும் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 6 மாத காலம் அவகாசம் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் விசாரணையில் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு காவல் துறை விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. இந்த சூழலில் செந்தில் பாலாஜி வழக்கில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக விசாரணை அதிகாரியாக இருந்து வந்த நாகஜோதி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நாகஜோதிக்கு பதிலாக புதிய துணை ஆணையராக ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். நாகஜோதி தற்போது ஆவணக் காப்பக எஸ்பியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடுவர் என தெரிகிறது.
-
விளாத்திகுளம் மாணவி கொலையில் குற்றவாளி சிக்கியது எப்படி? - தென் மண்டல ஐஜி விளக்கம்! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா











Click it and Unblock the Notifications