Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சாந்தன் இலங்கை செல்ல அனுமதி.. கடிதம் அளித்தது மத்திய அரசு.. தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையாகியுள்ள சாந்தன், இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும் தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் இலங்கை அனுப்பப்படுவார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

Central government allowed Santhan to go to Sri Lanka


ஆனால் இலங்கை தமிழர் என்பதால் சாந்தன், திருச்சியில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டார். திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் சாந்தன் தங்க வைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த ஆண்டு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். இந்த கடிதத்தில், "கடந்த 32 ஆண்டுகளாக எனது தாயாரை பார்க்கவில்லை. அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.

மேலும் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சாந்தன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசு தரப்பில், சாந்தன் இலங்கைக்கு செல்வதற்காக தற்காலிக பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம் வழங்கி இருக்கிறது.

இந்த ஆவணங்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசு தரப்பிலோ, தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் எங்களுக்கு கிடைக்கவில்லை. தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆவணங்கள் கிடைத்த உடன் ஒரு வாரத்தில் சாந்தன் இலங்கைக்கு செல்வதற்கான உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், சுமார் 32 ஆண்டுகள் இந்தியாவில் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தன் இலங்கை செல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இலங்கை தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பின் அனுப்பப்படுவார் என்றும், சாந்தன் விரைவில் இலங்கை செல்ல விமான டிக்கெட் வாங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

திருச்சி ஆட்சியருக்கு அனுமதி கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் இலங்கை தூதரக அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தூதரக அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு சாந்தன் இலங்கை அனுப்பி வைக்கப்படுவார். இதேபோல், 2 நாளில் சாந்தன் இலங்கை அனுப்பப்படுவார் என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான கைதிகளில் வெளிநாடு செல்லும் முதல் நபர் சாந்தன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+