மீன்பிடி துறைமுகங்கள் இனி சிஐஎஸ்எஃப் வசம்? மத்திய அரசின் முடிவுக்கு எஸ்டிபிஐ கடும் எதிர்ப்பு!
சென்னை: தமிழகத்தின் கடற்கரை ஓரங்களில் அமைந்துள்ள மீன்பிடி துறைமுகங்களை மத்திய பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த முடிவுக்கு மீனவ அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக எஸ்டிபிஐ கட்சி இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் எனச் சாடியுள்ளது.
இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள சுமார் 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை சிஐஎஸ்எஃப் (CISF) பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழகத்தின் சென்னை காசிமேடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார் மற்றும் தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கியமான துறைமுகங்கள் இந்த வரைமுறைக்குள் வரவுள்ளன. இதனால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் தினசரி செயல்பாடுகள் பாதிக்கப்படும் என்ற அச்சம் பரவலாக எழுந்துள்ளது.
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், "இந்தியாவின் கடற்கரைப் பாதுகாப்பு என்ற பெயரில், நாடு முழுவதும் உள்ள 1,200 மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன்பிடி இறங்கு தளங்களை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) கீழ் கொண்டு வர ஒன்றிய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஒன்றிய அரசின் இத்திட்டத்தால் தமிழகத்தில் உள்ள சென்னை காசிமேடு தொடங்கி, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட முக்கிய மீன்பிடி துறைமுகங்களும், நூற்றுக்கணக்கான மீன்பிடி இறங்கு தளங்களும் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கட்டுப்பாட்டிற்குள் செல்லும் நிலை உருவாகும்.
விமான நிலையங்கள், கப்பல் கட்டும் தளங்கள் மற்றும் பொதுத்துறை பெருநிறுவனங்களுக்குரிய கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளை மீன்பிடி துறைமுகங்களில் திணிப்பது முற்றிலும் நடைமுறைக்குச் சாத்தியமற்றது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் படகுகளும் வந்து செல்லும் ஒரு சுறுசுறுப்பான பணியிடமே இத்துறைமுகங்கள் ஆகும். இங்கு பயோமெட்ரிக் கண்காணிப்பு, ஸ்மார்ட் அடையாள அட்டை, கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகள் என்ற பெயரில், சொந்த மண்ணிலேயே மீனவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் ஒரு உளவுப் பிரதேசமாக மாற்றும் முயற்சி நடக்கிறது. துறைமுகத்திற்கு வரும் சாதாரண தொழிலாளர்களிடம் துப்பாக்கி ஏந்திய மத்தியப் படையினர் காட்டக்கூடிய அணுகுமுறை, பெரிய அளவிலான மோதல்களுக்கும் அச்ச உணர்வுடன் கூடிய சூழலுக்கும் வழிவகுக்கும்.
இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகளும் சோதனைகளும் மீன் வணிகத்தின் வேகத்தைக் குறைப்பதோடு; மீனவர்கள், சுமை தூக்குவோர், வியாபாரிகள் மற்றும் ஐஸ் ஃபேக்டரி ஊழியர்கள் சுதந்திரமாக வேலை செய்யும் சூழலை முடக்கி, அவர்களின் பாரம்பரிய வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கும். மேலும், இந்த இ பாதுகாப்புக்கான பெரும் தொகையை 'துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணமாக' (Harbour User Fee) தொழிலாளர்களிடமிருந்தே வசூலிக்க வாய்ப்புள்ளது, இது ஏற்கனவே நலிவடைந்துள்ள மீன்பிடித் துறையை மேலும் வீழ்த்தும்.
காலங்காலமாக எவ்வித தடையுமின்றி கடலுக்குச் சென்று வரும் நம் பாரம்பரிய மீனவ குடும்பங்களை, கார்ப்பரேட் நிறுவனங்களின் காவலாளிகள் போல சி.ஐ.எஸ்.எஃப் படையினர் மூலம் கட்டுப்படுத்துவது எவ்வகையிலும் ஏற்புடையதல்ல. சாதாரண மனிதர்கள் வாழ்வாதாரத்திற்காகச் சார்ந்திருக்கும் துறைமுகங்களை, 'மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளாக' (Strategic Zones) அறிவித்து, கார்ப்பரேட்டுகளுக்குச் சாதகமான சூழலை உருவாக்குவதற்கான சதி முயற்சியே இதற்குப் பின்னால் உள்ளது.
கடல்சார் பாதுகாப்பு மத்திய அரசின் கீழ் வந்தாலும், 12 கடல் மைல் வரையிலான மீன்பிடித் தொழில் மற்றும் கடலோர வாழ்வாதாரங்களை முறைப்படுத்தும் முழு அதிகாரமும் மாநில அரசுகளுக்கே உரியது. மாநில அரசுகளிடமோ அல்லது சம்பந்தப்பட்ட மீனவ பிரதிநிதிகளிடமோ எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமல், தன்னிச்சையாக இத்தகைய கண்காணிப்பு முறையைத் திணிப்பது நாட்டின் கூட்டாட்சி தத்துவத்தையும், மீனவர்களின் ஜனநாயக உரிமைகளையும் அப்பட்டமாகச் சீர்குலைக்கும் செயலாகும்.
எல்லையோரக் கடலில் இலங்கை கடற்படையினரால் ஏற்கனவே அன்றாடம் இன்னல்களுக்கு உள்ளாகும் நம் மீனவர்களுக்கு, உள்நாட்டிலேயே மத்திய பாதுகாப்புப் படைகள் மூலம் புதிய நெருக்கடியை உருவாக்குவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்களின் கலாச்சாரத்தையும், உரிமைகளையும், தன்னாட்சியையும் சிதைக்கும் இந்த மக்கள் விரோத நடவடிக்கையிலிருந்து ஒன்றிய அரசு உடனடியாகப் பின்வாங்க வேண்டும் என்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடனடியாக ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மாநிலத்தின் உரிமையைக் காக்கவும், லட்சக்கணக்கான தமிழக மீனவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கவும், ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் இத்திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு உடனடியாகத் தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்.
மீனவ சமூகத்தின் உரிமைகளை மீட்டெடுக்கும் இந்த வாழ்வாதாரப் போராட்டத்தில், ஒட்டுமொத்த மீனவ அமைப்புகளுடனும், கடலோர மக்களுடனும் எஸ்டிபிஐ கட்சி எப்போதும் தோளோடு தோள் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு நெல்லை முபாரக் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
மத்திய அரசின் முடிவால் திருப்பூருக்கு ஜாக்பாட் .. பின்னலாடை அதிபர்கள் குஷி! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்














Click it and Unblock the Notifications