Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராணுவ தளவாடங்களை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம்! தமிழகத்திற்கு அதிக பலன்: டிஆர்டிஓ தலைவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ‛‛மத்திய அரசின் திட்டத்தின் மூலம் டிஆர்டிஓ வழியாக தமிழக சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக பலன் கிடைக்கும்'' என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறினார்.

இந்தியாவின் ராணுவத்துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள், உள்பட பல பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதை குறைத்து இந்தியாவில் உற்பத்தியை துவங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான சிறப்பு அறிவிப்புகளை சமீபத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதாவது பாதுகாப்புத்துறையில் (ராணுவம்) தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பு வழங்கினார்.

 டிஆர்டிஓ

டிஆர்டிஓ

இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ராணுவத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. இதன் தலைவரும், பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயலாளருமான சதீஷ் ரெட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

 சிறப்பு திட்டம்

சிறப்பு திட்டம்

"ராணுவத்துறையில் தளவாட பொருட்களின் மேம்பாடு, வடிவமைப்பை தனியார் தொழிற்சாலைகள் வழங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து வழங்க இந்திய தொழில்துறையினர் டிஆர்டிஓவுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இதற்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 ஆராய்ச்சி மையம்

ஆராய்ச்சி மையம்

பாதுகாப்பு துறை சார்பில் தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை துவங்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வதற்கான சிறப்பு திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்மூலம் தனியார் தொழில் நிறுவனங்கள் பலன் அடையும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு படிநிலையிலும் டிஆர்டிஓவுடன் சேர்ந்து செயல்பட முடியும். மேலும் ராணுவ தளவாட பொருள், உபகரணங்கள் வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி, மேம்பாடு மேற்கொள்ளலாம். அத்துடன் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியும் எளிதாக செய்யலாம்.

 சிறு நிறுவனங்களுக்கு பலன்

சிறு நிறுவனங்களுக்கு பலன்

கோவை, ஓசூர், திருச்சியில் உள்ள பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஆர்டிஓவுடன் இணைந்து செயல்படுகின்றன. முன்மொழியப்பட் இந்த பாதுகாப்பு வழித்தடமானது தொழில்துறையில் பாதுகாப்பு துறை தொடர்பான திட்டங்களை அதிகம் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் விண்வெளி துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் 120க்கும் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில் 700 சப்ளையர்கள் உள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பு மூலம் இந்த நிறுவனங்கள் ராணுவ துறைக்கான முக்கிய தயாரிப்பு பணிகளை பெறும். மேலும் தமிழகத்தின் சிறிய மற்றும் பெரிய பல நிறுவனங்கள் தொழில் சார்ந்து பலனடையும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+