ராணுவ தளவாடங்களை தயாரிக்க உள்நாட்டு நிறுவனங்களுக்கு ஊக்கம்! தமிழகத்திற்கு அதிக பலன்: டிஆர்டிஓ தலைவர்
சென்னை: ‛‛மத்திய அரசின் திட்டத்தின் மூலம் டிஆர்டிஓ வழியாக தமிழக சிறு தொழில் நிறுவனங்களுக்கு அதிக பலன் கிடைக்கும்'' என டிஆர்டிஓ தலைவர் சதீஷ் ரெட்டி கூறினார்.
இந்தியாவின் ராணுவத்துறையில் பயன்படுத்தப்படும் தளவாடங்கள், உள்பட பல பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதை குறைத்து இந்தியாவில் உற்பத்தியை துவங்க மத்திய அரசு முடிவு செய்தது. இதுதொடர்பான சிறப்பு அறிவிப்புகளை சமீபத்திய பட்ஜெட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். அதாவது பாதுகாப்புத்துறையில் (ராணுவம்) தனியார் பங்களிப்புக்கு வாய்ப்பு வழங்கினார்.

டிஆர்டிஓ
இந்நிலையில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ராணுவத்துக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதில் பெரும் பங்களிப்பு செய்து வருகிறது. இதன் தலைவரும், பாதுகாப்பு துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவு செயலாளருமான சதீஷ் ரெட்டி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சிறப்பு திட்டம்
"ராணுவத்துறையில் தளவாட பொருட்களின் மேம்பாடு, வடிவமைப்பை தனியார் தொழிற்சாலைகள் வழங்க மத்திய அரசு ஊக்குவிக்கிறது. பாதுகாப்பு துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதற்கான கொள்கைகளை வகுத்து வழங்க இந்திய தொழில்துறையினர் டிஆர்டிஓவுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. இதற்காக சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஆராய்ச்சி மையம்
பாதுகாப்பு துறை சார்பில் தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை துவங்க டிஆர்டிஓ திட்டமிட்டுள்ளது. பாதுகாப்பு துறையில் தனியார் தொழில் நிறுவனங்கள் பங்களிப்பு செய்வதற்கான சிறப்பு திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இதன்மூலம் தனியார் தொழில் நிறுவனங்கள் பலன் அடையும். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு படிநிலையிலும் டிஆர்டிஓவுடன் சேர்ந்து செயல்பட முடியும். மேலும் ராணுவ தளவாட பொருள், உபகரணங்கள் வடிவமைப்பு, சோதனை, உற்பத்தி, மேம்பாடு மேற்கொள்ளலாம். அத்துடன் சந்தைப்படுத்தல் மற்றும் ஏற்றுமதியும் எளிதாக செய்யலாம்.

சிறு நிறுவனங்களுக்கு பலன்
கோவை, ஓசூர், திருச்சியில் உள்ள பல நிறுவனங்கள் ஏற்கனவே டிஆர்டிஓவுடன் இணைந்து செயல்படுகின்றன. முன்மொழியப்பட் இந்த பாதுகாப்பு வழித்தடமானது தொழில்துறையில் பாதுகாப்பு துறை தொடர்பான திட்டங்களை அதிகம் மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும். தமிழகத்தில் விண்வெளி துறை சார்ந்த உற்பத்தி நிறுவனங்கள் 120க்கும் அதிகமாக உள்ளன. இந்த நிறுவனங்களில் 700 சப்ளையர்கள் உள்ளனர். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய அறிவிப்பு மூலம் இந்த நிறுவனங்கள் ராணுவ துறைக்கான முக்கிய தயாரிப்பு பணிகளை பெறும். மேலும் தமிழகத்தின் சிறிய மற்றும் பெரிய பல நிறுவனங்கள் தொழில் சார்ந்து பலனடையும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications