மத்திய அரசு ஊழியர்களுக்கு யோகம்தான்.. ஹோலிக்கு முன்பே அகவிலைப்படி உயர சான்ஸ்.. எவ்வளவு கூடும்?
சென்னை: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. கடந்த இரண்டு முறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுப்படி பார்த்தால் இந்த முறையும் 3 சதவீதத்திற்கு மேல் இருக்கும் என மத்திய அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹோலி பண்டிகைக்கு முன்பே அகவிலைப்படி உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு மூலம் 1.2 கோடி அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். அகவிலைப்படி உயர்வை பொறுத்தவரை ஆண்டுக்கு இருமுறை உயர்த்தப்படும். பணவீக்கத்தின் அடிப்படையில் அகவிலைப்படி உயர்வு இருக்கும். ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அகவிலைப்படி இன்னும் உயர்த்தப்படவில்லை.

அகவிலைப்படி உயர்வு எப்போது?
ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி மார்ச் மாதத்தில் முன் தேதியிட்டு வழங்கப்படுகிறது. ஜூலை மாதம் உயர்த்தப்படும் அகவிலைப்படி அக்டோபர் அல்லது நவம்பரில் உயர்த்தப்படும். அதாவது தீபாவளி பண்டிகைக்கு முன்பாக இரண்டாவது அகவிலைப்படி உயர்வு உயர்த்தப்படும். எனவே ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு குறித்து கடந்த 5 ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்ப்படவில்லை.
ஹோலி பண்டிகைக்கு முன்பு
எனினும் ஹோலி பண்டிகைக்கு முன்பாக அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஜூலை மாதத்தில் அகவிலைப்படி உயர்வு 50 ல் இருந்து 53 சதவீதமாக உயர்த்தப்பட்டது. மார்ச் 7, 2024-ல் 46 சதவீத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டது. ஹோலி பண்டிகைக்கு முன்பாக இந்த அறிவிப்பு வெளியானது. இந்த ஆண்டில் வரும் 14 ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. எனவே ஹோலி பரிசாக அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த இருமுறை உயர்த்தப்பட்ட அகவிலைப்படி உயர்வுப்படி பார்த்தால் இந்த முறையும் 3 சதவீதத்திற்கு மேல் அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்பதே மத்திய அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அகவிலைப்படி என்பது அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பணவீக்கத்தினை கணக்கில் கொண்டு அளிக்கப்படுவதாகவும். அடிப்படை சம்பளத்தில் இருந்து அரசு அறிவிக்கும் சதவீதம் கூடுதலாக பணம் கிடைக்கும்.
8 வது ஊதிய கமிஷன்
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை பே கமிஷன் அமைக்கப்படுகிறது. தற்போது உள்ள 7-வது ஊதிய கமிஷன் அடுத்த ஆண்டுடன் முடிவடைய உள்ள நிலையில், 8-வது ஊதிய கமிஷன் அமைக்க மத்திய கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. ஊதிய கமிஷன் குழு பல்வேறு தரப்புடன் ஆலோசித்து எத்தனை சதவீதம் சம்பள உயர்வு அளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை அளிக்கும்.
இதன்படிப்படையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கப்படுவது வழக்கம். 8-வது பே கமிஷன் மூலமாக உள்துறை உள்ளிட்ட 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 65 லட்சம் ஓய்வூதியர்களும் என மொத்தம் ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயன்பெறுவார்கள். 8வது ஊதியக்குழுவின் சம்பள உயர்வின் சரியான சதவீதம் வெளியிடப்படவில்லை.
எனினும், சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களைத் தீர்மானிக்கப் பயன்படுத்தப்படும் பிட்மென்ட் காரணியின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த பிட்மென்ட் காரணி 2.57ல் இருந்து 2.86 ஆக உயரக்கூடும் எனக்கூறப்படுகிறது. இந்த அளவு உயர்த்தப்பட்டால், இது நடந்தால், அரசு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படை சம்பளம், 18,000 ரூபாயில் இருந்து, 51,480 ரூபாயாக உயரும். எனவே மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து குட்நியூஸ்கள் காத்திருக்கின்றன.
-
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்?












Click it and Unblock the Notifications